வாரம் 2 முறை போதும் தலைமுடி கருப்பாகவே இருக்கும்
ஆண்கள் பெண்கள் யாராக இருந்தாலும் தலைமுடி கருமையாக இருக்க வேண்டும் என்று தான் நினைப்போம்.
ஆனால் வாழ்வியல் மாற்றங்கள் நம் அழகை சீர்குலைக்கும்படி நம் உடலில் சில மாற்றங்களை தருகிறது. அதில் முக்கியமானது தலைமுடி நரைத்து போவது. இது பெரியவர்களுக்கு மட்டும் இல்லை சிறய மற்றும் பதின் பருவத்தினரும் சந்திக்கும் பிரச்சனை. இந்த பிரச்சனை சரிசெய்ய நாம் சில தவறான முயற்சிகளை எடுக்கிறோம் அதில் ஒன்று ரசாயண டை இது நிறைய பிரச்சனைகளின் ஆரம்பமே தவிர முடிவு அல்ல.
இதற்கு தீர்வுதான் என்ன என தோன்றுகிறதல்லவா?
தலைமுடி நரை பிரச்சனையை சரிசெய்ய அதாவது நம் தலைமுடியை இயற்கையாக கருமையாக்க நம் இயற்கை மருத்துவம் அதாவது நாட்டு வைத்தியத்தில் அற்புத வழி உள்ளது. அதான் அவுரி மற்றும் ஹென்னா என்று அழைக்கப்படும் மருதாணி பொடி.
இந்த அவுரி பொடி4 தேக்கரண்டி மற்றும் மருதாணி பொடி2 தேக்கரண்டி எடுத்து தேவையான தண்ணீரில் ஒன்றாக கலந்து தலையில் ஹேர் பேக் போட்டு குறைந்தது 30 நிமிடங்கள் அதிகபட்சம் 2மணி நேரம் உலரவிட்டு வழக்கம் போல் தலை குளியல் செய்தால் தலைமுடி இயற்கையான கருமை நிறத்தை பெறும்.
அவுரி ஹென்னா பொடிகள் கிடைக்கும் இடத்தின் லிங்க் மற்றும் பயன்படுத்தும் முறை எப்படி என்ற லிங்க் தரப்பட்டுள்ளது.