குழந்தை வரம் தரும் வாழைபூ மருந்து
அனைத்துப் பகுதிகளும் பயனுடைய ஒரு மரம் என்றால், அது வாழைமரம்தான், அதுவும் சாதரண மரம் கிடையாது. மருத்துவப் பயனுள்ள மரம். வாழைப்பூவில் என்னென்ன பயன்கள் என்பதை விரிவாக காண்போம்.
வாழைப்பூவில் நிறைந்துள்ள சத்துக்கள்:-
கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்புசத்து, புரதச்சத்து, வைட்டமின் பி, சி மற்றும் நார்ச்சத்து. வாழைப்பூவானது இரத்த நாளங்களில் ஒட்டியுள்ள கொழுப்புகளைக் கரைத்து இரத்தத்தை சுத்தமாக்கும். இரத்த அழுத்தம்,இரத்த சோகை போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். இரத்தத்தில் கலந்துள்ள அதிகளவு சர்க்கரையை கரைக்க வாழைப்பூவின் துவர்ப்புத்தன்மை அதிகம் உதவுகிறது. இதனால் இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது.
வயிற்று புண்களை குணமாக்கும் சக்தி கொண்டது வாழைப்பூ. வாழைப்பூவானது மூலநோயின் பாதிப்பினால் மலத்துடன் இரத்தம் வெளியேறுதல்,உள்மூலம், வெளிமூலப் புண்கள், மூலக்கடுப்பு, இரத்த மூலம் போன்றவற்றைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது. சீதபேதியையும் கட்டுப்படுத்தும். வாய்ப் புண்ணைப் போக்கி வாய் நாற்றத்தையும் நீக்கும். பெண்களுக்கு உண்டாகும் கருப்பைக் கோளாறுகள், மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் அதிக இரத்தப்போக்கு,வெள்ளைப்படுதல் போன்ற நோய்களுக்கு வாழைப்பூவை உணவில் சேர்த்துக்கொண்டு வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
வாழைப்பூவை வேக வைத்தோ அல்லது பொரியல் செய்தோ அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும். அஜீரணம் கோளாறுகள் சரியாகும். உடல் சூடு உள்ளவர்கள் வாழைப்பூவுடன் பாசிப்பருப்பு சேர்த்து கடைந்து அதனுடன் நெய் சேர்த்து வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் உடல் சூடு குறையும்.