மருத்துவ குணம் நிறைந்த கருமஞ்சள்
எல்லோருக்கும் சாதாரண மஞ்சள், கஸ்தூரி அல்லது விரலி மஞ்சள் இவைகளை தான் அதிகமாக தெரியும். ஆனால் இன்னும் ஒரு மஞ்சள் இருக்கிறது. அதைத் தான் கருமஞ்சள் என்று கூறுவார்கள். கருத்துப் போய் உள்ள இந்த மஞ்சள் உள்ளே நீல நிறத்தில் இருக்கும். வட மாநிலங்களில் இந்த மஞ்சளை பணத்தை ஈர்ப்பதற்கு மற்றும் ஆன்மீக காரியங்களில் பயன்படுத்துவது வழக்கம். மருத்துவ குணம் நிறைந்த இந்த மஞ்சளை பற்றிய வியக்க வைக்கும் உண்மைகள்.
ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி, நிமோனியா போன்ற நுரையீரல் நோய்களுக்கு சிகிச்சையளிக்க கருமஞ்சள் உதவுகிறது. கருமஞ்சளில் உள்ள குர்குமின், நுரையீரல் சிகிச்சையிலும், நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
சருமப் பிரச்சனையான லுகோடெர்மாவால் பாதிக்கப்பட்டவர்கள், அந்தப் பகுதிகளில் கருமஞ்சளை தடவலாம். இதன் மூலம் லுகோடெர்மா பிரச்சனையில் இருந்து விடுதலை பெற முடியும்.
கருமஞ்சள் ஒரு சிறந்த வலி நிவாரணியாக கருதப்படுகிறது. சொறி, பல்வலி, கீல்வாதம் மற்றும் வயிற்றுப் பிரச்சனைகள் என அனைத்து பிரச்சனைகளில் இருந்தும் விடுபட கருமஞ்சளை நீங்கள் பயன்படுத்தலாம். இருப்பினும், கருமஞ்சளை எடுத்துக் கொள்வோம் அதனை சரியான அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
கருமஞ்சளின் குர்குமின் புற்றுநோய் செல்களை வளர விடாமல் தடுக்கும் என அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும், கருமஞ்சள் உடல் உறுப்புகளில் புற்றுநோய்க்கு முந்தைய மாற்றங்களை மாற்றியமைப்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.