அதிக கண் திருஷ்டி இருப்பதை உணர்த்தும் முக்கிய அறிகுறிகள்
ஒவ்வொருவரும் தங்களின் அன்றாட தேவைக்கும், குடும்பத்திற்காகவும் கஷ்டப்பட்டு உழைத்து பொருள் சேர்ப்பது வழக்கம். ஆனால் சிலர் எளிதாக உயர்ந்த நிலை அடைவார்கள். சிலரோ எவ்வளவு கஷ்டப்பட்டு பணம் சேர்த்தாலும் அதே இடத்தில் இருப்பார்கள்.
காரணம் அவர்களின் உழைப்பு, திட்டமிடுதலில் குறை இல்லை. அதைத் தாண்டி அவர்களை சுற்றியுள்ளவர்கள், வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் என அவர்கள் மீதும் அவர்களின் உழைப்பு முன்னேற்றத்தைக் கண்டு கண் திருஷ்டி வைப்பதாலும் கஷ்டம் தொடரலாம்.
நமக்கோ அல்லது நம் குடும்பத்தில் இருப்பவர்களுக்கோ திருஷ்டி தோஷங்கள் ஏற்பட்டுள்ளதா என்பதை பல நிகழ்ச்சிகள் மூலமும், சில அறிகுறிகள் மூலமும் தெரிந்து கொள்ளலாம். திருஷ்டி, தோஷத்தால் பாதிக்கப்பட்டவரின் வீட்டில் தொடர்ந்து ஏதாவது பிரச்சினைகள், தடைகள், சோகம், பிரிவு, நஷ்டம், கைப்பொருள் இழப்பு என வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக வந்துகொண்டே இருக்கும்.