“இறப்பைத்தவிர மற்ற எல்லா நோய்களையும் குணப்படுத்தக் கூடியது கருஞ்சீரகம்” என்று நபிகள் நாயகம் சொன்னது வேதவாக்காகக் கருதப்படுகிறது. யுனானி மருத்துவத்தில், கருஞ்சீரக எண்ணெயை பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. நபிகள் நாயகத்தின் வாக்குக்கு ஏற்ப அரபு நாடுகளிலும் கருஞ்சீரகம் அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது.
கருஞ்சீரகத்தில் இடம்பெற்றுள்ள தைமோகுவினோன் வேறு எந்த தாவரத்திலும் இல்லாத ஒன்று என்பது குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒன்று. மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு அவசியமான அமினோ அமிலங்கள், அவசியமான கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள், பீடா-கரோடின், கால்சியம், இரும்புச் சத்து, பொட்டாசியம் என பலவிதமான சத்துக்களையும் கொண்டுள்ளது.
நாள்பட்ட புற்றுநோய், இருதயநோய் மற்றும் ஆஸ்துமா ஆகியவற்றையும் கருஞ்சீரகம் குணப்படுத்தும் என்றும் நம்பப்படுகிறது. அதுமட்டுமல்ல, மனிதர்களின் நோய் எதிர்பாற்றல் முறைமையை கருஞ்சீரகம் வலுப்படுத்தும் என்றும் ஆய்வுகள் உறுதிபடுத்துகின்றன.
மாதவிடாய் காலங்களில் மார்பக வலி கொண்டுள்ள பெண்கள் கருஞ்சீரக விதை எண்ணெய் சேர்த்த ஜெல்லை பயன்படுத்துவதன் மூலம் மார்பக வலி குறைவதாக ஆராய்ச்சி காட்டுகிறது. கருவுறாமை பிரச்சனை கொண்ட ஆண்கள் கருஞ்சீரக விதை எண்ணெய் எடுக்கும் போது அது விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்கிறது.உயர் இரத்த அழுத்த பிரச்சனைகளை கொண்டிருக்குப்பவர்கள் கருஞ்சீரகத்தை நேரடியாக எடுத்துகொள்ளும் போது அது இரத்த அழுத்தத்தை சிறிய அளவில் குறைக்க செய்யும் என்று ஆராய்ச்சி தெரிவிக்கிறது.
கருஞ்சீரகம் நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை அளவை மேம்படுத்துகிறது. ஆஸ்துமா மருந்துகளோடு எடுத்துகொள்ளும் போது இது சிலருக்கு இருமல், மூச்சுத்திணறல் மற்றும் நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
இந்த என்னை ஆர்டர் செய்ய இங்கே அழுத்தவும்
பிறந்தநாள்/திருமணநாள் வாழ்த்து மடல் பெற இங்கே கிளிக் செய்யவும்