நிர்ஜல ஏகாதசி விரதம் என்றால் என்ன?
நிர் என்றால் இல்லாமல், ஜலா என்றால் தண்ணீர். நிர்ஜல ஏகாதசி விரதம் என்றால் தண்ணீர் கூட உட்கொள்ளாமல் விரதம் இருப்பது என்று பெயரிலேயே தெரிகிறது. எனவே, பக்தர்கள் இந்த ஏகாதசி திதியில் நாள் முழுவதும் தண்ணீர் கூட பருகாமல் இருக்கக்கூடிய விரதம் ஆகும்.
இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், நிர்ஜல ஏகாதசி பீம ஏகாதசி அல்லது பாண்டவ ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது. ஏனெனில் இந்த விரதத்தை பாண்டவர்கள் ஐவரும் கடைப்பிடித்தனர். ஆனால் அவர்களில் பாண்டவ சகோதரர்களில் இரண்டாவது நபரான பீமனால் மட்டுமே இந்த விரதம் முழுமையாகக் கடைப்பிடிக்க முடிந்ததாம்.
மிகவும் பசிக்கக்கூடிய, அதிகம் உண்ணக்கூடிய பீமன் இந்த விரதத்தை சிறப்பாக
கடைப்பிடித்ததால் இதற்கு பீமசேனை ஏகாதசி எனவும் அழைக்கப்படுகிறது. இதில் ஆனி மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை ஏகாதசி நிர்ஜல ஏகாதசி என அழைக்கப்படுகிறது.
மற்ற ஏகாதசி நாட்களில் விரதம் இருக்க முடியாதவர்கள் நிர்ஜல ஏகாதசி விரதத்தைக்
கடைப்பிடித்து, மற்ற 23 ஏகாதசி விரதத்தில் இருந்த புண்ணியத்தைப் பெற்றிட முடியும் என்பது நம்பிக்கை. இந்தாண்டு ஜூன் 10ம் தேதி அதிகாலை 3.16 மணிக்கு ஏகாதசி திதி தொடங்கி ஜூன் 11ம் தேதி அதிகாலை 2.00 மணி வரை உள்ளது.
பிறந்தநாள்/திருமணநாள் வாழ்த்து மடல் பெற இங்கே கிளிக் செய்யவும்