நோய்களே வராமல் தடுக்க செய்யும் திரிபலா
நோய் தாக்கிய பிறகு மருந்து எடுத்துகொள்வதும், சிகிச்சை பெறுவதும் இயல்பானது. ஆனால் நோயே வராமல் கட்டுக்குள் வைக்க உணவு முறையை மாற்றிகொண்டவர்கள் நம் முன்னோர்கள்..
நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் என மூன்று பொருள்களையும் சேர்த்து தயாரிக்கப்படும் பொடிதான் திரிபலா சூரணம் என்றழைக்கப்படுகிறது. பக்குவமான முறையில் இதை தயாரிக்க வேண்டும். இதை காயகல்பம் என்றும் நித்ய ரசாயனம் என்றும் அழைக்கிறார்கள். மருந்துகளில் அமிர்தம் என்றும் இதை சொல்லலாம். உடலில் நோய் வராமலும் நோயை தீர்க்கும் அற்புத மருந்தாகவும் இவை செயல்படுகிறது.
இதை வீட்டில் தயாரிக்கும் முறை குறித்து முதலில் தெரிந்துகொள்வோம். நெல்லிக்காய் – 4 பங்கு, தான்றிக்காய் – 2 பங்கு, கடுக்காய் – 1 பங்கு அளவில் எடுத்துகொள்ள வேண்டும். நெல்லிக்காய், கடுக்காயை விதை நீக்கி பயன்படுத்த வேண்டும். இந்த மூன்றையும் நிழலில் காயவைத்து அரைத்து பொடியாக்கவும். கடுக்காய், தான்றிக்காய் நாட்டு மருந்துகடைகளில் கிடைக்கும் என்றாலும் தயாரிக்க சிரமம் இருப்பவர்கள் நாட்டு மருந்துகடைகளில் கிடைக்கும் பொடியை வாங்கி பயன்படுத்தலாம்.
எல்லா காலங்களிலும் இதை உள்ளுக்குள் எடுத்துகொள்ளலாம். ஆனால் உரிய முறையில் எடுத்துகொள்ள வேண்டும். கோடையில் நீருடனும், குளிர்காலத்தில் தேனுடனும், மழைக்காலங்களில் வெந்நீருடனும் கலந்து சாப்பிடவேண்டும்.
இதை சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது குறித்து பார்க்கலாம்:
- சாதாரண தொற்று முதல் புற்று நோய்வரை
- ஜீரணம் எளிதாக
- சீரான ரத்த ஓட்டம்
- நீரிழிவு
- எடையை கட்டுக்குள் வைக்கும்
குழந்தைகளுக்கு கொடுக்கும் போது தேனில் குழைத்தும், பெரியவர்கள் நீரில் கலந்தும் குடிக்க வேண்டும். தினமும் காலை இரவு என இரண்டு வேளையும் குடிக்கலாம்.
இந்த திரிபலாவை வாங்க இங்கே கிளிக் செய்யவும்
உங்கள் பிறந்தநாள்/திருமண நாட்களில் வாழ்த்துகளைப் பெற இங்கே கிளிக் செய்யவும்