விஜய்-அஜித்திடம் இருக்கும் ஒற்றுமை

Date:

Share post:

விஜய்-அஜித்திடம் இருக்கும் ஒற்றுமை

விஜய்-அஜித்திடம் இருக்கும் ஒற்றுமை

விஜய்-அஜித்திடம் இருக்கும் ஒற்றுமை

விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது. அஜித் குமார் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் ஏகே 61 திரைப்படம் உருவாகி வருகிறது.

சமீபத்தில் விஜய்யின் 48-வது பிறந்தநாள் ஜூன் 22ம் தேதி பிறந்தநாளை அவரது ரசிகர்கள் கொண்டாடினர்.

வாரிசு படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தை தொடர்ந்து தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

விஜய் பிறந்த நாள் பொழுது அவரது சூட்டிங் ஸ்பாட்டில் கலந்துகொண்டார். அப்போது சரத்குமார் உட்பட அனைவரும் கலந்துகொண்டனர்.

வாரிசு படத்தில் விஜய் குடும்பமாக நடிக்கும் அத்தனை பிரபலங்களும் ரசிகர்களும் இந்த பிறந்த நாளுக்கு வந்து விஜய்யுடன் கொண்டாடி அசத்தி விட்டனராம்.

அதுமட்டுமின்றி இந்த பிறந்த நாளில் எடுக்கப்பட்ட போட்டோக்கள் அனைத்தையும் ரகசியமாக வைத்திருக்கின்றனர்.

வாரிசு படம் வெளி வந்த பின்னர்தான் வெளியிடுவார்களாம். இந்த போட்டோக்களை இப்பொழுதே வெளியிட்டால் படத்தில் அனைவரது கெட்டப்பும் தெரிந்துவிடும்.

அதுமட்டுமின்றி போடப்பட்ட செட்டுகள் அனைத்தையும் எளிதாக வெளியில் கசிந்து விடும் என்று இந்த போட்டோக்களை ரகசியமாக பாதுகாத்து வருகின்றனர்.

ஆனால் விஜய் அவர்கள்,  பிறந்தநாளன்று அவரைப் பார்க்க ரசிகர்கள் வந்தால் உடனே ஒரு நிமிடம் காத்திருங்கள் என கூறிவிட்டு,

கேரவனுக்குள் சென்று தன்னுடைய படத்திற்கான கெட்டப்பை முழுவதுமாக கலைத்துவிட்டு சாதாரணமாக வந்து நின்று ரசிகர்களிடம் புகைப்படம் எடுத்துக் கொள்வாராம் .

அதேபோல்தான் அஜித்தும் அவரது ரசிகர்கள் அவரிடம் புகைப்படம் எடுக்க நினைத்தால் ஒரு நிமிடம் காத்திருங்கள் எனக்கூறிவிட்டு உடனே கேரவனுக்குள் சென்று முழுவதுமாக தன்னுடைய கெட்டப்பை கலைத்துவிட்டு ரசிகர்கள் சாதாரணமாக நின்று புகைப்படம் எடுத்துக்கொள்வார்.

இந்த விஷயத்தில் விஜய் அஜித் நிற்கும் ஒற்றுமையாக தான் உள்ளனர்.

மீனா நடிப்பில் மறக்க முடியாத 6 படங்கள்.. காலத்தால் அழியாத சோலையம்மா

நடிகை மீனாவின் கண்களே போதும். நடிப்பின் அத்தனை பாவத்தையும் தன் கண்களாலேயே காட்டிவிடுவார்.

குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி டாப் நடிகர்களுக்கு கதாநாயகியாக நடித்த தற்போது முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் மீனா நடிப்பில் மறக்க முடியாத 6 படங்களை பார்க்கலாம்.

ஆனந்த பூங்காற்றே : ராஜ்கபூர் இயக்கத்தில் கார்த்திக், அஜித், மீனா, மாளவிகா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஆனந்த பூங்காற்றே.

இப்படத்தில் மீனாட்சி என்ற ஒரு விதவை கதாபாத்திரத்தில் மீனா நடித்திருந்தார். இப்படத்தில் தனது தந்தையின் தவறான புரிதலால் தந்தையை இழந்த குழந்தைக்கு தாயாக மாறியிருப்பார் மீனா.

எஜமான் : சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் குழந்தையாக நடித்துவிட்டு அவருக்கு ஜோடியாக நடித்த படம் எஜமான்.

இப்படத்தில் ரஜினியின் மனைவியாக வைத்தீஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இப்படத்தில் தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் மீனா ரசிகர்களை கவர்ந்தார்.

வெற்றிக்கொடி கட்டு : சேரன் இயக்கத்தில் முரளி, பார்த்திபன், மீனா, மாளவிகா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் வெற்றிக்கொடிகட்டு.

கணவர் வெளிநாட்டில் இருப்பதால் அவரின் குடும்பத்தை மனைவிதான் முன்னெடுத்த நடத்த வேண்டும் என்பதை மக்களுக்குப் புரியும்படி உணர்த்தி இருப்பார் மீனா.

ரிதம் : வசந்த் இயக்கத்தில் அர்ஜுன், ஜோதிகா, மீனா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ரிதம்.

இப்படத்தில் ஒரு வங்கி ஊழியர் சித்ரா என்ற கதாபாத்திரத்தில் மீனா நடித்திருந்தார். இப்படத்தில் அர்ஜுன் மற்றும் மீனா இருவரின் முதல் வாழ்க்கை விபத்தால் பறிபோன நிலையில் மீண்டும் இவர்கள் இருவரும் இணைகிறார்கள் என்பதே படத்தின் கதை.

இப்படத்தில் மீனா தத்ரூபமாக நடித்து இருப்பார்.

என் ராசாவின் மனசிலே : கஸ்தூரிராஜா இயக்கத்தில் ராஜ்கிரன், மீனா, வடிவேலு நடிப்பில் வெளியான திரைப்படம் என் ராசாவின் மனசிலே.

இப்படத்தில் சோலையம்மா என்ற மென்மையான கதாபாத்திரத்தில் மீனா நடித்திருந்தார்.

இப்படத்தில் ராஜ்கிரணை பார்த்து அஞ்சி நடுங்கும் மீனாவின் நடிப்பு யதார்த்தமாக இருந்தது.

பிரசவிக்கும் போது சோலையம்மாவின் இறப்பு படத்தைப் பார்க்கும் ரசிகர்களுக்கு கண்ணீர் வரச் செய்து.

நாட்டாமை : சரத்குமார், குஷ்பு, மீனா ஆகியோர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் நாட்டாமை.

இப்படத்தில் மீனா இரண்டு விதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

அதாவது பணக்கார திமிர் பிடித்த பெண்ணாகவும், அதன்பிறகு கணவனுக்காக எல்லாவற்றையும் தாங்கிக்கொள்ளும் குடும்பப்பாங்கான பெண்ணாகவும் தனது நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

குழுவில்சேர இங்கே அழுத்தவும்

இங்கே கிளிக் செய்யவும்

பிறந்தநாள்/திருமண நாள் வாழ்த்துக்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.

 

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...