அஸ்வகந்தாவில் கிடைக்கும் மருத்துவ பலன்கள்

Date:

Share post:

அஸ்வகந்தாவில் கிடைக்கும் மருத்துவ பலன்கள்

அஸ்வகந்தா என்பது ஆயுர்வேத மூலிகை ஆகும். இதை பெரும்பாலான பிரச்சனைகளுக்கு பயன்படுத்துகிறோம்.

ஆண்கள் தினமும் அஸ்வகந்தாவை எடுத்துகொள்வதால் அழகு மற்றும் ஆரோக்கியம் தொடர்பான நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

அஸ்வகந்தா குறித்து பல முறை பல கட்டுரைகளை பொதுவாக பார்த்திருக்கிறோம். பொதுவாகவே அஸ்வகந்தா என்பது பாலியல் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான மருந்தாகவே பார்க்கிறோம்.

கருவுறுதலை மேம்படுத்தும் மருந்தாகவும் இது பயன்படுத்தப்படுகிறது. இது உண்மையே என்றாலும் கூட அஸ்வகந்தா இன்னும் பல நன்மைகளை அளிக்கிருக்கிறது.

குறிப்பாக ஆண்களுக்கு அஸ்வகந்தா தரும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

அஸ்வகந்தாவை தினமும் எடுத்துகொள்வதன் மூலம் உண்டாகும் நன்மைகள் குறித்து ஆண்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

இது மாறிவரும் பருவங்களுக்கும் தொற்றுநோய்களுக்கும் மத்தியில் ஆரோக்கியத்தை சிறப்பாக பராமரிக்க செய்யும்.

அஸ்வகந்தா தூள் கால் டீஸ்பூன் அளவு (300 கிராமுக்கு அதிகமாகாமல் இருக்க வேண்டும் )எடுத்து அதை பாலில் கலந்து இரவு உணவுக்கு பிறகு குடிக்கலாம். இதை தேனில் குழைத்தும் சாப்பிடலாம்.

அஸ்வகந்தாவை தேநீராக தயாரித்தும் கொடுக்கலாம். இதை தினசரி குடிக்கலாம். இப்படி குடிப்பதால் உண்டாகும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

சருமத்தை இளமையாக வைத்திருக்கிறது:

பெண்களுக்கு இணையாக ஆண்களும் பலவிதமான சரும பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள்.

அதிகப்படியான மனம் மற்றும் உடல் அழுத்தங்கள் இன்றைய கால கட்டத்தில் ஆண்கள் எதிர்கொள்ளும் போது அது அவர்களது சருமத்தில் மோசமான விளைவுகளை உண்டாக்குகிறது.

இதை கட்டுப்படுத்த ஆண்களும் பெண்களுக்கு இணையாக சரும பராமரிப்பை மேற்கொள்கிறார்கள்.

ஆனால் இதனால் மட்டும் இதை சரி செய்யமுடியாது. உள்ளுக்கு மருந்தாக அஸ்வகந்தாவை எடுத்துகொள்ளும் போது அது சருமத்தை இளமையாக வைத்திருக்க செய்கிறது.

அஸ்வகந்தா உடலில் இருக்கும் கொலாஜன் செயல்முறையை துரிதப்படுத்துகிறது.

கொலாஜன் என்பது சருமம் சுருக்கங்கள், சருமத்தில் கோடுகள், பருக்கள், நோய்த்தொற்றுகள் மற்றும் தடிப்புகள் ஆகியவற்றிலிருந்து விடுபடவும் அஸ்வகந்தா உதவுகிறது.

மேலும் சரும செல்களை தொடர்ந்து பராமரித்து சருமத்தை இளமையாக வைத்திருக்க செய்யும்.

அஸ்வகந்தாவில் கிடைக்கும் மருத்துவ பலன்கள்

முடி உதிர்தல், இளநரை தடுக்கிறது:

முடி உதிர்தல் என்பது ஆண்களுக்கு வழுக்கையை உண்டாக்கும் அளவுக்கு அதிகரிக்க செய்துவிடுகிறது.

வழுக்கை வரும் வரை விட்டு விட்டு பிறகு பராமரிப்பு செய்தால் முடி வளர்ச்சி என்பது சிரமமானதாகி விடும். ஆண் பிள்ளைகளுக்கு சிறு வயதிலேயே தலை முடி இளநரையாக வந்துவிடுகிறது.

வழக்கமாக 30 வயதுக்குள் பெரும்பாலான ஆண்களுக்கு வெள்ளை முடி பிரச்சனை வந்துவிடுகிறது. அஸ்வகந்தாவை உட்கொள்வதன் மூலம் நரை முடியும் வராது. முடி உதிர்தல் பிரச்சனையிலிருந்தும் பாதுகாக்க செய்யும்.

ஆண்கள் அஸ்வகந்தாவை எடுத்துகொள்ளும் போது அது முடி பிரச்சனையையும் தீர்த்துவிடும்.

கார்டிசோல் அளவு:

அஸ்வகந்தா உடலில் இருக்கும் கார்டிசோல் ஹார்மோன் அளவை சமன் செய்கிறது.

இந்த ஹார்மோன் அளவு அதிகமாக இருந்தால் அது முடி உதிர்தலை அதிகரிக்க செய்யும்.

மேலும் கூந்தலில் மெலனின் இல்லாததால் முடி வெண்மையாக மாற தொடங்கும். இந்த வெண்மையை குறைக்கும் அமினோ அமிலங்கள் அஸ்வகந்தாவில் உள்ளது.

இது மெலனின் உற்பத்தியை அதிகரிக்க செய்கிறது. முடிக்கு வெண்மை நிறத்தை குறைத்து கருப்பு முடியின் நிறத்தை மேன்மைப்படுத்துகிறது.

​பாலியல் சக்தியை அதிகரிக்கிறது:

அஸ்வகந்தாவை வழக்கமாக உட்கொள்வது பாலியல் சக்தியை அதிகரிக்கிறது என்பதை முன்கூட்டியே பார்த்தோம்.

இனப்பெருக்க உறுப்பு தொடர்பான நோய் உங்களுக்கு இருந்தால் இந்த மருந்தை பயன்படுத்துவதன் மூலம் உங்கள் நோய் குறைபாட்டு பிரச்சனையும் நீங்கும்.

ஆண்களுக்கு மட்டும் அல்ல, பெண்களுக்கும் வெள்ளைப்படுதல் பிரச்சனை ஆண்களில் விறைப்புத்தன்மை (ஆண்குறி தளர்வது) ஆகிய பிரச்சனையையும் தீர்க்க இவை உதவுகிறது.

​உடல் மனம் ஆரோக்கியம்:

அஸ்வகந்தா என்பது உடல் மற்றும் மனம் வளர்ச்சியை நேரடியாக பாதிக்கும் பிரச்சனையிலிருந்து தவிர்க்க உதவுகிறது.

அஸ்வகந்தாவை உட்கொள்வதன் மூலம் உடலில் மன அழுத்தம் மற்றும் உடல் ஆரோக்கியம் சமநிலையாக இருக்கும்.

இது உடல் தசைகள் மற்றும் மனநிலை ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடியது. இது உடலில் வளர்சிதை மாற்றத்தை சரிசெய்ய உதவுகிறது.

அஸ்வகந்தாவில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் உணவு செரிமானத்தின் போது உற்பத்தி செய்யப்படும் தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை கட்டுப்படுத்துகின்றன.

செரிமான அமைப்புக்கு சேதம் உண்டாகாமால் இருக்க அதன் வேலையை மேம்படுத்த செய்கிறது.

​நீரிழிவு இருப்பவர்கள் அஸ்வகந்தா சாப்பிடலாமா?

ஆண்கள் தினசரி அஸ்வகந்தா சாப்பிடும் போது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் குடும்ப வரலாறில் . நீரிழிவு பாதிப்பு அதிகமாக இருப்பவர்கள் குடும்பத்தில் இருக்கும் ஆண்கள் அஸ்வகந்தாவை எடுத்துகொள்வது நல்ல பலன் அளிக்கும்.

இந்த அஸ்வகந்தா இரத்த சர்க்கரை அளவை சாதாரணமாக வைத்திருக்க இவை செய்கிறது. இனி அஸ்வகந்தா எடுத்துகொள்வதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை பராமரியுங்கள்.

தினசரி இதை எடுப்பதாக இருந்தால் மருத்துவரை ஆலோசனை செய்த பிறகு எடுத்துகொள்ளலாம். இது பாதுகாப்பானதும் கூட.

அஸ்வகந்தா பொடியை வாங்க இங்கே அழுத்தவும்

 

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...