அண்ணாநகரில் போக்குவரத்து மாற்றம்

Date:

Share post:

அண்ணாநகரில் போக்குவரத்து மாற்றம்

அண்ணாநகர்

அண்ணாநகரில் போக்குவரத்து மாற்றம்

தனியார் நிகழ்ச்சி காரணமாக தொடர்ந்து ஐந்து ஞாயிற்றுக்கிழமைகளில் அண்ணாநகரில் காலை 6 மணி முதல் 9 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக நகர காவல்துறை அறிவித்துள்ளது.

தனியார் நிகழ்ச்சி காரணமாக தொடர்ந்து ஐந்து ஞாயிற்றுக்கிழமைகளில் அண்ணாநகரில் காலை 6 மணி முதல் 9 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக நகர காவல்துறை அறிவித்துள்ளது.

ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ்‘ என்ற நிகழ்ச்சி, ஜூலை 17, ஜூலை 24, ஜூலை 31, ஆகஸ்ட் 7 மற்றும் ஆகஸ்ட் 14 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

புளூஸ்டார் சந்திப்பிலிருந்து நல்லி சந்திப்பு வரையிலான இரண்டாவது அவென்யூ முற்றிலும் தடை செய்யப்பட்டு நிகழ்வுக்காக ஒதுக்கப்படும்.

திருமங்கலத்திலிருந்து அண்ணாநகர் ரவுண்டானா, சிந்தாமணி நோக்கி வரும் வாகனங்கள் புளூஸ்டார் சந்திப்பில் 5வது அவென்யூ நோக்கி இடதுபுறம் திரும்பி 6வது அவென்யூ, அண்ணாநகர் காவல் நிலைய ரவுண்டானாவை அடைந்து சிந்தாமணி ரவுண்டானாவுக்குச் செல்ல வேண்டும்.

திருமங்கலத்தில் இருந்து அமைந்தகரை, ஈ.வி.ஆர்.சாலை நோக்கி வரும் வாகனங்கள் புளூஸ்டார் சந்திப்பில் 5வது அவென்யூ நோக்கி வலதுபுறம் திரும்பி 4வது அவென்யூவை அடைந்து அமைந்தகரை, பூந்தமல்லி நெடுஞ்சாலைக்கு செல்ல வேண்டும்.

அண்ணாநகர் ரவுண்டானாவில் இருந்து திருமங்கலம் நோக்கி வரும் வாகனங்கள் இரண்டாவது அவென்யூவில் உள்ள நல்லி சந்திப்பில் 3வது பிரதான சாலையை நோக்கி இடதுபுறம் திரும்பி 4வது அவென்யூவை அடைந்து திருமங்கலம், முகப்பேர் வழியாக செல்ல வேண்டும்.

புளூ ஸ்டார் சந்திப்பில், 5வது அவென்யூவில் உள்ள ஜெஸ்ஸி மோசஸ் பள்ளி பகுதியில் இருந்து அண்ணாநகர் ரவுண்டானாவுக்கு வரும் வாகனங்கள்,

இடதுபுறம் திரும்புவதை தவிர்த்து, 5வது அவென்யூவில் நேராக சென்று, 4வது அவென்யூவை அடைந்து, அண்ணாநகர் ரவுண்டானாவிற்கு செல்ல வேண்டும்.

ஈ.வி.ஆர்.சாலையில் திருப்பம்

இதற்கிடையில், காந்தி இர்வின் சந்திப்பில் இருந்து டாக்டர் நாயர் முனை சந்திப்பு வரை (வெளியே செல்லும் போக்குவரத்து)

வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கள் காலை 5 மணி வரை ஈவிஆர் சாலையில் மெட்ரோ குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடைபெறுவதால், போக்குவரத்து மாற்றம் செய்யப்படும்.

மெரினாவை சீரமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது

இங்கே கிளிக் செய்யவும்

பிறந்தநாள்/திருமண நாள் வாழ்த்துக்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...