சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தின் கதை

Date:

Share post:

சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தின் கதை

சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தின் கதை

டான் படத்தை தொடந்து நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் அடுத்ததாக பிரின்ஸ் படம் ரிலீசாக உள்ளது.

சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தின் கதையைப்பற்றி இணையத்தில் வெளியான தகவல்

இதையடுத்து தற்போது இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் என்ற படத்தில் இணைந்துள்ளார் சிவகார்த்திகேயன்.

இந்தப் படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோவை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் டாக்டர், டான் வெற்றிகளை தொடர்ந்து சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவரது நடிப்பில் அடுத்தடுத்து பிரின்ஸ், அயலான் போன்ற படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன.

இந்நிலையில் மண்டேலா படத்தின் இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் என்ற படத்திலும் இணைந்துள்ளார் சிவகார்த்திகேயன்.

இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் துவங்கவுள்ளது. படத்தை சாந்தி டாக்கீஸ் தயாரிக்கவுள்ளனர்.

இந்நிலையில் இந்தப் படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பை டோலிவுட் சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு இன்றைய தினம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தின் கதை

சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தின் கதை

இந்த அறிவிப்பு வீடியோவாக வெளியாகியுள்ளது.

மண்டேலா என்ற சிறப்பான படத்தை கொடுத்து முதல் படத்திலேயே ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் மடோன் அஸ்வின்,

அவரது இயக்கத்தில் தற்போது சிவகார்த்திகேயன் இணைந்துள்ளது மிகச்சிறந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.https://dai.ly/x8chika

முதல் படத்திலேயே யோகி பாபுவை வைத்து சிறப்பான காமெடி மற்றும் சிறப்பான கதைக்களத்துடன் படத்தை கொடுத்திருந்தார் மடோன் அஸ்வின்.

தமிழ் சினிமாவில் தற்போது டாப் ஹீரோக்களில் ஒருவராக திகழ்பவர் சிவகார்த்திகேயன்.

சின்னத்திரையில் இருந்த சிவகார்த்திகேயனை இயக்குனர் பாண்டிராஜ் மெரினா படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு கொண்டுவந்தார்.

அதைத்தொடர்ந்து அவருக்கு திரைப்பயணத்தில் ஏறுமுகம்தான்.

எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், ரெமோ என தொடர் வெற்றிகளை கொடுத்து அசத்தி வந்தார் சிவகார்த்திகேயன்.

பிரின்ஸ்

ஆனால் இடையில் சில தோல்விப்படங்களை கொடுத்த சிவகார்த்திகேயன் டாக்டர், டான் போன்ற வெற்றிப்படங்களை கொடுத்து மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பினார்.

இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் அனுதீப் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகிவரும் பிரின்ஸ் படத்தில் நடித்து வருகின்றார்.

மேலும் ராஜ் கமல் பிலிம்ஸ் சார்பாக கமல் தயாரிக்கும் ஒரு படத்திலும், மண்டேலா படத்தை இயக்கிய அஸ்வின் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்கின்றார் சிவகார்த்திகேயன்.

இந்நிலையில் சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் மாவீரன் படத்தின் டைட்டில் ஒரு மாஸான வீடியோவின் மூலம் வெளியானது.

அதில் சிவகார்த்திகேயனின் ஹேர் ஸ்டைல் மட்டும் லுக் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

தளபதி படத்தில் தோன்றும் ரஜினியின் லுக்கை போலவே மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனின் லுக் இருந்தது.

அதைத்தொடர்ந்து ரஜினியின் பட டைட்டிலான மாவீரன் என்ற பெயரைத்தான் இப்படத்திற்கும் வைத்துள்ளனர்.

சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தின் கதை

கதை இதுதான்

இந்நிலையில் இப்படத்தின் கதை இதுதான் என சமூகத்தளங்களில் ஒரு தகவல் பரவிவருகிறது.

அதாவது ஏழை மக்களுக்காக சிவகார்த்திகேயன் பணக்காரர்களுக்கு எதிராக போராடுவதுதான் படத்தின் ஒரு வரி கதை என சில செய்திகள் வருகின்றன.

கதையை கேட்கும்போது சாதாரணமாக இருந்தாலும் மேக்கிங்கில் சிறப்பாக இருக்கும் என சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் கருத்து தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.

கியாரா அத்வானி ஜோடி இந்தப் படத்தில் பிரபல பாலிவுட் நாயகி கியாரா அத்வானி சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகியுள்ளார்.

இந்தப் படத்தை தொடர்ந்து கமலின் தயாரிப்பில் சாய் பல்லவி ஜோடியாகவுள்ள படத்தின் சூட்டிங்கிலும் சிவகார்த்திகேயன் இணையவுள்ளார்.

அடுத்தடுத்த அவரது படங்கள் வெற்றிப் படங்களாக அமைவதால் அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.
அண்ணாநகரில் வந்தது “ஹாப்பி ஸ்ட்ரீட்

சிந்திங்க9நியூஸ்

பிறந்தநாள்/திருமண நாள் வாழ்த்துக்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...