கடகம் ராசியின் குணநலன்கள்

Date:

Share post:

கடகம் ராசியின் குணநலன்கள்

கடகம் ராசியின் குணநலன்கள்

குணநலன்கள்

நண்டை ராசிச் சின்னமாகக் கொண்டது. நீர்வாழ் உயிரினங்களைப் போல நண்டுகள் தங்கள் எல்லைகளை ஆக்ரோஷமாக பாதுகாக்கும் மேலும் யாராவது தன் எல்லையை நெருங்கி வந்தால் அவர்களை தாக்கவும் தயங்குவதில்லை.

விருச்சிகம் மற்றும் மீனத்தைப் போலவே இவை நீர் ராசிகள் என்பதால் மிகவும் உணர்சசிகரமானவர்கள் மற்றும் கற்பனை சிந்தனைகளில் மூழ்குபவர்கள். அவர்களுடைய கருணை மிக்க இதயம் மற்றவர்களுக்காக பச்சாதாபப்படும்.

சக மனிதர்கள் கஷ்டத்தில் இருக்கும் போது கடக ராசிக்காரர்கள் உதவ ஒருபோதும் தயங்குவதில்லை.

பிரச்சனைகளை தீர்ப்பவர்கள்

கடகம் ராசியின் குணநலன்கள்

சிக்கல்களை தவிர்ப்பது மற்றும் பிரச்சனைகளை அலசி ஆராய்ந்து முடிவெடுக்கும் திறன் ஆகியவை கடக ராசிக்காரர்களை பிரச்சனைகளை தீர்ப்பதில் சிறந்த திறமை கொண்டவர்களாக்குகிறது.

பொதுவாக பின்வாங்குவதில்லை, மாறாக நண்பர்களுக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் இடையே பிரச்சனைகள் ஏற்பட்டால் ஒரு பக்க சார்பற்ற நிலைப்பாட்டில் முடிவுகளை எடுப்பார்கள்.

தவறுகளை விரைவாக ஒப்புக் கொள்வார்கள் தேவைப்பட்டால் மன்னிப்பும் கேட்பார்கள்.

தவறு இருப்பதாக நினைத்தால் விவாதம் செய்யவோ சண்டை போடவோ மாட்டார்கள்.

இதை வைத்து அவர்களை குறைவாக எடை போடக்கூடாது. கடக ராசிக்காரர்கள் அவர்களுடைய கனிவான குணத்தை நீங்கள் அனுகூலமாக எடுத்துக் கொள்கிறீர்கள் என்று உணர்ந்தால் மிக உறுதியானவர்களாக மாறிவிடுவார்கள்.

கடக ராசிக்காரர்களுடன் டேட்டிங் செய்வது மிக ஆனந்தமான அனுபவம், ஏனென்றால் அவர்கள் மிகுந்த விருப்பத்துடனும் முழு மனதுடனும் உங்களை நேசிப்பார்கள்.

அடிப்படை குணம்

குழந்தைத்தனமானவர்கள். அவர்கள் விருப்பப்படி விஷயங்கள் நடக்கவில்லை என்றால் உச்சபட்ச கோபத்தை அடைவார்கள்.

நண்டுகளைப் போலவே கடக ராசிக்காரர்கள் சுயநலமானவர்கள், தங்கள் பொருட்களின் அதிக சொந்தம் கொண்டாடுபவர்கள்.

பல சந்தர்ப்பங்களில் மற்றவர்கள் மீது பொறாமையால் அவதிப்படுவார்கள். இருந்தாலும் கூட, கடக ராசிக்காரர்களை காதலிப்பது என்பது உங்கள் உணர்ச்சி மிகுதியால் மட்டுமே நடக்கும்,

ஏனென்றால், மற்றவர்களுக்காக எதையாவது செய்ய வேண்டுமென்றால் கடக ராசிக்காரர்கள் அரிதாகவே செய்ய முன்வருவார்கள். தங்கள் உறவுகள் உட்பட, யாருக்காக இருந்தாலும் அரை மனதுடனே ஒரு காரியத்தை செய்வார்கள்.

பாதுகாப்பவர்கள்

இயற்கையாகவே பாதுகாக்கும் சுபாவம் கொண்டவர்கள். இதனால் சில சமயங்களில் அவர்கள் சற்று சுயநலமானவர்களாகக் கூட தோன்றலாம்.

பொறாமை கொண்டவர்கள் தான் என்றாலும் மற்றவர்களின் சந்தோஷத்தை கெடுக்க மாட்டார்கள்,

அதே சமயம் எக்காரணம் கொண்டும் தங்கள் சந்தோஷத்தை தியாகம் செய்ய மாட்டார்கள்.

கருணை மிக்கவர்கள்

கடினமான வெளிப்புறத்தை கவனிக்க தவறினால், பெரும்பாலான கடக ராசிக்காரர்களின் தனித்தன்மையான, மென்மையான, கருணை நிறைந்த ஒரு பக்கத்தை நீங்கள் பார்க்கலாம்.

அசாதாரணமான மதி நுட்பத்தை கொண்டவர்கள், அவர்களை பொக்கிஷமாக, வேண்டப்பட்டவராக உணர, உங்களுக்கு அவர்கள் மீது அன்பு தேவை.

பொறுப்புகளை ஏற்க பயப்பட மாட்டார்கள்


ஒருவருடன் வெறுமனே காதலில் மட்டும் விழுவதில்லை, வாழ்நாள் முழுவதற்குமான பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார்கள். கடக ராசிக்கார்களோடு உறவில் இணையும் போது அது குறுகிய கால அல்லது தற்காலிக உறவாக இருக்காது என்பதை நீங்கள் உறுதியாகத் தெரிந்துக் கொள்ளலாம்.

தொழில் மற்றும் செல்வநிலை

காதலில் விழுந்தவுடன் எல்லா வகையிலும் தன் துணைவருக்கு நிழலை தருகிறார்கள், பிரிக்க முடியாத ஜோடியாக இருப்பார்கள்.

அதிர்ஷடவசமாக அவர்கள் சிறந்த வாழ்க்கைத் துணைவர்களாக இருக்கிறார்கள், அவர்கள் ஒரு இடத்தில் இல்லாதபோது கூட சிறந்த உள்ளுணர்வால் அனைத்தையும் உணர்ந்து கொள்கிறார்கள்.

எளிமையை விரும்புபவர்கள்

குழப்பங்களை வெறுக்கிறார்கள். வாழ்க்கையை சிக்கலாக்கும் மோதல்களையும் வாதங்களையும் தவிர்க்க முடிந்த அளவு அனைத்து விதங்களிலும் முயற்சி செய்வார்கள்.

நண்டைப் போலவே, அவர்கள் மிகவும் மென்மையானவர்கள் என்பதால் எளிதில் உடல்ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் காயப்பட்டு விடுவார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நுட்பமானவர்கள்

ஒரு மோசமான எதிர்மறை அதிர்வலை அல்லது ஒரு சோகமான விஷயம் கடக ராசிக்காரர்களின் உள்ளுணர்விலிருந்து தப்பிக்க முடியாது.

அவர்கள் மிக நுட்பமான உணர்வு கொண்டவர்கள், ஒற்றை கேள்வி கூட கேட்காமல் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை கண்டுபிடித்து விடுவார்கள்.

திறந்த மனம் கொண்டவர்கள்

கடகம் ராசியின் குணநலன்கள்

நம்மைப் பற்றி எப்படி மதிப்பிடுவார்களோ என்கிற அச்சம் இல்லாமல் மனம் விட்டு பேச ஒருவர் வேண்டுமென்றால் அதற்கு கடக ராசிக்காரர்கள் சிறந்தவர்கள்.

உங்கள் குறைகளோடு கடக ராசிக்காரர்கள் உங்களை விரும்பக்கூடிய தனித்தன்மை கொண்டவர்கள்.

கடகம் ராசியின் குணநலன்கள்

சிந்திங்க9

பிறந்தநாள்/திருமண நாள் வாழ்த்துக்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...