தினம் ஒரு திருக்கோயில்-சென்னிமலை

Date:

Share post:

தினம் ஒரு திருக்கோயில்-சென்னிமலைதினம் ஒரு திருக்கோயில்-சென்னிமலை

திருத்தலம் சென்னிமலை சுப்பிரமணியசாமி கோவில்
மூலவர் சுப்ரமணியசுவாமி (தண்டாயுதபாணி)
அம்மன் அமிர்த வல்லி, சுந்தர வல்லி
தல விருட்சம் புளியமரம்
தீர்த்தம் மாமாங்கம்
ஆகமம் காரண, காமிக ஆகமம்
புராண பெயர் புஷ்பகிரி, கரைகிரி, மகுடகிரி
ஊர் சென்னிமலை
மாவட்டம் ஈரோடு

 

சென்னிமலை முருகன் திருக்கோவில் கடல் மட்டத்திலிருந்து 1749 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது. ஈரோடு மாவட்டத்திலிருந்து தாராபுரம் செல்லும் நெடுஞ்சாலையில் சுமார் 28 கிலோ மீட்டர் தொலைவில் சென்னிமலை திருத்தலம் அமைந்துள்ளது.

தல புராணம்:

முன்னொரு காலத்தில் அனந்தன் என்ற நாகர்ஜூனனுக்கும், வாயு தேவனுக்கும் பலப்பரிட்சை நடந்தது.

அனந்தன் மகாமேரு பருவதத்தை சுற்றிப்பிடித்துக் கொள்ள வாயு தேவன் கடுமையாக வீசி அனந்தன் பிடியிலிருந்து மேரு மலையை விடுவிக்க முயன்றார்.

அப்போது மேருவின் சிகரப்பகுதி முறிந்து பறந்து சென்று பூந்துறை நாட்டில் விழுந்தது. அச்சிகரப்பகுதியே சிரகிரி, புஷ்பகிரி, மகுடகிரி, சென்னிமலை என்றும் வழங்கலாயின.

தல வரலாறு:

தினசரி மாலையில் ஆவினங்கள் கூட்டமாக தொட்டிக்கு திரும்பி வரும்போது காராம் பசு மட்டும் பிரிந்து சற்று தூரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தன் மடியில் உள்ள

பால் முழுவதும் தானாகவே சொறியவிட்டு பின் மறுபடியும் மாடுகள் கூட்டத்தில் சேர்ந்து வருவதை சில நாட்கள் கவனித்து விட்டு, அந்த குறிப்பிட்ட இடத்தில் மண்ணை தோண்டி பார்க்கச் செய்தார்.

சுமார் 5 / 6 அடி ஆழம் தோண்டியதும், எல்லோரும் அதிசயிக்கத்தக்க பூர்ண முகப்பொழிவுடன் ஒரு கற்சிலை தென்பட்டது.

பண்ணையார் புளங்காகிதம் அடைந்து தன்னை ஆட்கொண்ட இறைவனே வந்து விட்டதாகக் கூறிக்கொண்டு விக்ரஹத்தை எடுத்து அதன் முகப்பொழிவில் ஈடுபட்டு மெய்மறந்திருந்தார்.

பின் விக்ரஹத்தை ஆராய்ந்தபோது விக்ரஹத்தின் இடுப்புவரை நல்ல வேலைப்பாட்டுடன் முகம் அதி அற்புதப் பொழிவுடன் இருக்க, இடுப்புக்குகீழ் பாதம் வரை சரியாக வேலைப்பாடில்லாமல் கரடுமுரடாக இருப்பதை

அவர் ஒரு குறையாக எண்ணி அந்த பாகத்தையும் சிறந்த சிற்பியைக் கொண்டு உளியினால் வேலை துவங்கும் சமயம் அந்த இடத்தில் இரத்தம் பீறிட்டது.

இதை கண்ணுற்ற எல்லோரும் பயந்து மேற்கொண்டு சுத்தம் செய்வதை நிறுத்திவிட்டார்கள்.

பண்ணையார் தன் அபசாரத்திற்கு வருந்தி ஆண்டவர் இப்படியே இருக்க பிரியப்படுகிறார் என்று மகிழ்ந்து பயபக்தியுடன் ஆராதனை செய்து பக்கத்திலுள்ள குன்றின்மேல் ஒரு சிறிய ஆலயம் எழுப்புவித்து இந்த சிலையை பிரதிஷ்டை செய்ததாயும்,

அதுவே சென்னிமலை மலையின் பேரில் தண்டாயுதபாணி மூர்த்தமாக ஆட்சிப் பீடத்தில் வீற்றிருப்பதாயும், சரித்திர ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனார்கள்.

அதன் சான்றாக அருள்மிகு தண்டாயுதபாணி மூர்த்தம் திருமுகம் பூரணப் பொழிவுடனும், இடுப்புக் கீழே வேலைப்பாடற்றும் இருப்பதை இன்றும் காணலாம்.

கோவில் அமைப்பு

பக்தர்கள் எளிதில் செல்ல 1320 திருப்படிகள் கொண்ட படிவழி பாதையும், வாகனங்கள் மூலம் செல்ல 4 கிலோ மீட்டர் தூரமுள்ள தார்சாலை ஒன்றும் உள்ளது.

படிவழியில் ஆங்காங்கே நிழல்தரும் மண்டபங்களும், குடிநீர் வசதியும், இரவு நேரங்களில் பாதுகாப்பிற்காக படிவழியில் மின் விளக்குகளும் அமைக்கப்பட்டுள்ளது.

மலைக்கோவிலில் மூலவர் சன்னதிக்கு பின்புறம் அருள்மிகு வள்ளி, தெய்வானை சன்னதி தனியாகவும், இதற்கு பின்புறம் பின்நாக்கு சித்தர் சன்னதி தனியாகவும் அமைந்துள்ளது.

இரட்டை மாடுகள் பூட்டிய வண்டி

கடந்த 12.02.1984 அன்று இரட்டை மாடுகள் பூட்டிய வண்டி 1320 திருப்படிகள் வழியே மலைமேல் சென்று அதிசயம் நடைபெற்ற தலமாகும்.

ஐந்து நிலை இராஜ கோபுரம்

2005-ம் ஆண்டு புதிதாக ஐந்து நிலை இராஜகோபுரம் கட்டும் பணி துவங்கப்பட்டு, 2013-ம் ஆண்டில் சுமார் 2 கோடி செலவில் உபயதாரர்கள் மூலம் பணி நிறைவு செய்யப்பட்டு, 07.07.2014 அன்று கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

புதியதாக கட்டப்பட்டுள்ள ஐந்து நிலை இராஜ கோபுரத்தின் விதானத்தில் ஒரே கல்லினால் ஆன சங்கிலி வளையங்கள் பொருத்தப்பட்டுள்ளது தனிச்சிறப்பாகும்.

மார்கண்டேய தீர்த்தம்

தினம் ஒரு திருக்கோயில்-சென்னிமலை

“மூர்த்தி, தலம், தீர்த்தம் முறையாய் வணங்கினோர்க்கு வார்த்தை சொல்ல சற்குருவும் வாய்க்கும் பராபரமே” என்பது தாயுமானவர் வாக்கு, அப்படி மூன்றும் அமைந்த திருத்தலம் இச்சென்னிமலை ஆகும்.

வினைகளை தீர்ப்பதாலே தீர்த்தம் என பெயர் பெற்றதாக வாரியார் சுவாமிகள் கூறுவார். தீர்த்தங்களை பகவத் சொரூபமாக வணங்குவது நமது முன்னோர் மரபு.

ஆலயத்தில் உள்ள தெய்வத்திற்கு எந்தளவு சாந்நித்யம் உண்டோ! அதே அளவு தலத்திலுள்ள தீர்த்தத்திற்கும் உள்ளதாக சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது.

மேலும் ஒரு தலத்தில் இறைவன் விரும்பி உறைவதற்கு அங்குள்ள தீர்த்தங்கள் காரணமாக அமைகின்றன.

1) அக்னி தீர்த்தம், 2) அகத்திய தீர்த்தம், 3) இந்திர தீர்த்தம், 4) இமய தீர்த்தம், 5) ஈசான தீர்த்தம், 6) காசி தீர்த்தம், 7) காளி தீர்த்தம்,

8) கிருத்திகா தீர்த்தம், 9) குபேர தீர்த்தம், 10) சஷ்டி தீர்த்தம், 11) சாமுண்டி தீர்த்தம், 12) சாரதாம்பிகை தீர்த்தம், 13) சுப்ரமண்ய நெடுமால் தீர்த்தம், 14) தேவி தீர்த்தம், 15) நவவீர தீர்த்தம், 16) நிருதி தீர்த்தம்,

17) நெடுமால் தீர்த்தம், 18) பட்சி தீர்த்தம், 19) பிரம்ம தீர்த்தம், 20) மாமாங்க தீர்த்தம், 21) மார்க்கண்டேய தீர்த்தம், 22) வரடி தீர்த்தம், 23) வருணை தீர்த்தம், 24) வாயு தீர்த்தம்.

முதலிய தீர்த்தங்கள் இத்தல வரலாற்றில் சிறப்பாக சொல்லப்பட்டாலும் இம்மார்க்கண்டேய தீர்த்தமே நம் முன்னோர்களால் தெப்பக்குளமாக சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.

தினம் ஒரு திருக்கோயில்-சென்னிமலை

தல விருட்சம்

இத்திருக்கோவிலின் ஸ்தல விருட்சம் திந்துருணி (புளியமரம்) ஆகும். திருமணம் நடைபெற்ற புதுமணத் தம்பதியர்கள் புளிய மரத்தின் அடியில் பச்சரிசி மாவிடித்து வள்ளி,

தெய்வானை அம்மனுக்கு வழிபாடு செய்யும் வழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது. இம்மரத்தில் சந்தான கரணி என்னும் மூலிகை உள்ளதாக நம்பப்படுகிறது.

பிரார்த்தனை

தினம் ஒரு திருக்கோயில்-சென்னிமலை

பக்தர்கள் தங்களது தொழில் மேன்மையடையவும், திருமண காரியம் கைகூடவும், குழந்தை வரம் வேண்டியும், குழந்தைகள் கல்வி மேன்மையடையவும், வியாதிகள் தீரவும்,

கடன் தொல்லைகள் அகலவும், வாழ்க்கையில் எல்லா நலங்களும் பெற்று சுபிட்ஷமாக வாழவும் பிரார்த்தனை செய்து, நிறைவேறிய பின்னர்

பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதும், தேர்உலா நடத்துவதும், மூலவலருக்கு அபிஷேகம் செய்து மனைநிறைவு கொள்வதுமாக வழக்கத்தில் இருந்து வருகிறது.

தினம் ஒரு திருக்கோயில்-சென்னிமலை

சிந்திங்க9

பிறந்தநாள்/திருமண நாள் வாழ்த்துக்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...