முருகப்பெருமானுக்கு விசேஷமான ஆடிக்கிருத்திகை

Date:

Share post:

முருகப்பெருமானுக்கு விசேஷமான ஆடிக்கிருத்திகை

முருகப்பெருமானுக்கு விசேஷமான ஆடிக்கிருத்திகை

ஆடிக்கிருத்திகை

முருகனுக்கு உகந்த நாளாக, கூடுதல் விஷேசமாக கொண்டாடப்படும் ஆடி கிருத்திகை கொண்டாடப்படுகிறது.

ஆடிக் கிருத்திகை தினத்தில் முருகப்பெருமானை வணங்கி உங்கள் பிரச்சினைகளிலிருந்து விடுபட்டுங்கள்.

ஆடி மாதங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த நாள்தான் இந்த ஆடி கிருத்திகை.பொதுவாகவே கார்த்திகை நட்சத்திரத்தில் விரதம் இருப்பது மிகவும் நல்லது.

அதிலும் ஆடி கிருத்திகை அன்று விரதம் இருந்தால், நமக்கு இருக்கும் தோஷங்கள் கூட நிவர்த்தி ஆகும் என்று சொல்லப்பட்டுள்ளது.

சிவபெருமானின் அருளால் தோன்றியவர் முருகன். ஆறு கார்த்திகை பெண்களால் சீராட்டி வளர்க்கப்பட்டார் முருகப்பெருமான்.

அந்த கார்த்திகை பெண்களை கவுரவிக்கும் வகையில் அவர்கள் ஆறு பேரும் “கார்த்திகை” நட்சத்திரமாக மாறி அன்றைய தினத்தில் முருகப்பெருமான் வழிபடப்படும் வழக்கம் ஏற்பட்டது.

வருடத்தில் தை கிருத்திகை, ஆடி கிருத்திகை என்ற இரு கிருத்திகைகள் சிறப்பானதாகும். சூரனை அழித்து, தேவர்களைக் காத்த ஆறுமுக பெருமானை வளர்த்த கார்த்திகை பெண்களைப் போற்றும் விரத நாள்.

கார்த்திகை மாதத்தில் வரும் பெரிய கார்த்திகை மற்றும் கார்த்திகை தீபவிழா எனப்படும். மற்ற நட்சத்திரங்கள் ஒன்று, இரண்டு, மூன்று அல்லது நான்கு நட்சத்திரங்களுடைய கூட்டமாகும்.

கிருத்திகையில் மட்டும் நட்சத்திரங்கள் தாராளமாக இருப்பதால் அந்த நட்சத்திரத்தில் தானம் செய்யும் எஜமானனும் அவன் வம்ச பரம்பரையினர்களும் அளவற்ற நன்மைகளை அடைகிறார்கள் என்பது கருத்து.

இவ்வளவு பெருமை வாய்ந்தது கிருத்திகா நட்சத்திரம்.முருகனுக்கு உகந்த நாளாக ஒவ்வொரு மாதமும் கிருத்திகை நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

அதிலும் ஆடி கிருத்திகை கூடுதல் விஷேசமாக பார்க்கப்படுகிறது.

ஆடி கிருத்திகை சிறப்புகள்:

ஆடி கிருத்திகை தினத்தில் தான் சூரனை அழிக்க முருகப்பெருமான் சரவணப் பொய்கையில் 6 குழந்தைகளாக அவதரித்தார்.

அந்த குழந்தைகளை ஆறு கார்த்திகைப் பெண்கள் பாலூட்டி, சீராட்டி, பாராட்டி வளர்த்தனர்.

இதன் காரணமாக தான் முருகனுக்கு 6 முக்கியப் பங்கு வகிக்கின்றது. ‘சரவணபவ’ என்ற 6 எழுத்து மந்திரம், ஆறு முகம், ஆறு கரங்கள் உள்ளிட்ட பல சிறப்புகள்

சூரனை அழித்து, தேவர்களைக் காத்த ஆறுமுக பெருமானை வளர்த்த கார்த்திகை பெண்களைப் போற்றும் விதமாகக் கிருத்திகை விரத நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

என்ன விஷேசம்:

ஆடி கிருத்திகை தினத்தில், உலக தமிழ் மக்கள், தமிழ் கடவுள் முருகனுக்கு பிரார்த்தனைகளையும், நேர்த்திக்கடனையும் செலுத்தும் முக்கிய நாளாகக் கொண்டாடுகின்றார்கள்.

மாதந்தோறும் வரும் கிருத்திகை தினத்தில் முருகன் கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்துபவர்களும் உள்ளனர். அவ்வளவு சக்தி வாய்ந்தது இந்த கிருத்திகை திருநாள்

இந்த தினத்தில் முருகப் பெருமானுக்கு அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, திருவீதி உலா என மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.

பலன்கள்:

பொதுவாக செவ்வாயின் அம்சமாக முருகப் பெருமான் பார்க்கப்படுகிறார்.

முருகப்பெருமானுக்கு விசேஷமான ஆடிக்கிருத்திகை

அதனால் செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் திருமணத் தடைகள், செவ்வாய் தோஷ தடை, புத்திர தோஷம், சகோதரர்களால் சங்கடங்கள், குருதிசை மண், மனை, சொத்து வழக்குகளில் பிரச்னைகள்,

செவ்வாய் திசையால் பாதிக்கப்பட்ட்வர்கள் ஆடிக் கிருத்திகை தினத்தில் முருகப்பெருமானை வணங்கி அனைத்து பிரச்சினைகளிலிருந்து விடுபட்டு, சகல ஐசுவரியத்தைப் பெறலாம்.

எப்படி விரதம் இருப்பது?

ஒவ்வொரு கிருத்திகை தினத்தில் அதிகாலை எழுந்து நீராடி, வீட்டில் விளக்கேற்றி, அருகில் உள்ள முருகப் பெருமான் திருக்கோயிலுக்குச் சென்று வழிபட்டு உங்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொள்ளுங்கள்.

முருகப்பெருமானுக்கு விசேஷமான ஆடிக்கிருத்திகை

சிந்திங்க9

பிறந்தநாள்/திருமண நாள் வாழ்த்துக்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.

#முருகப்பெருமானுக்கு விசேஷமான ஆடிக்கிருத்திகை #செவ்வாயின் அம்சம் #சரவணபவ #6 குழந்தைகளாக அவதரித்தார் #சூரனை அழிக்க முருகப்பெருமான் #தை கிருத்திகை #ஆடி கிருத்திகை

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...