நாளைய 30.10.22 ஞாயிற்று கிழமை ராசிபலன்கள்

Date:

Share post:

நாளைய 30.10.22 ஞாயிற்று கிழமை ராசிபலன்கள்

மேஷம்

எதிர்பாராத தனவரவு வர ஏற்றம் காண்பீர்கள். இல்லத்தில் மகிழ்ச்சி பொங்க, மங்கல காரியங்கள் ஈடேறும். உங்கள் திறமை மிக்க செயல்பாடுகளால் வெற்றிகளும், பாராட்டுதல்களும் குவியும். வெளியூர்ப் பயணங்கள், வெற்றிகரமாகவும், லாபகரமாகவும் அமையும்.

கடையில், நவீன காலத்துக்கு ஏற்றபடி புதுப்புது சாமான்களை அறிமுகப்படுத்தி, வியாபாரத்தில் ஏற்றம் காண்பீர்கள். அரசுப் பணியாளர்கள் அதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள்.

தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளை அனுசரித்துச் செல்வது, பணி உயர்வு மற்றும் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும்.. புதிய முதலீடுகளால் தொழிலில் ஏற்றம் காணலாம்.

ரிஷபம்

நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் எப்பாடுபட்டாவது வெற்றி அடைவீர்கள். வாழ்க்கையில் எல்லாவித முன்னேற்றங்கள் மற்றும் கௌரவத்தையும் அடைவர். சிலருக்கு தங்கள் மனதிற்குப் பிடித்த படி அனைத்து வசதிகளுடன் கூடிய அழகிய இல்லம் அமையும்.

சிலருக்கு வீண் அலைச்சல்கள் ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் அனுகூலத்தால் உயர் பதவிகள் கிடைக்கும். அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு புதிய பதவிகள் தேடிவரும். அந்தஸ்தும் உயரும்.

அரசு பணிபுரியும் பெண்கள் தங்களுக்கு விருப்பமான இடத்திற்கு இடமாற்றம் பெற முயற்சிப்பர். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த ஆதாயம் கிட்டும். பால்வளம் பெருகுவதால் ஆதாயம் பெருகும்.

மிதுனம்

வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். சுற்று வட்டாரத்தில் நல்ல புகழும், கௌரவமும் உண்டாகும். ஆடை ஆபரண சேர்க்கையால் ஆனந்தம் பெருகும். பெண்கள் அதிகாலையில் எழுந்து பூஜா காரியங்களில் ஈடுபட்டு மன மகிழ்ச்சி அடைந்து, நிம்மதியும் பெறுவர். இடைவிடாத கடின உழைப்பின் காரணமாக நேரத்துக்கு உணவு உட்கொள்ளவும் நேரம் இருக்காது.

அரசாங்கத் துறைகள் மூலமாக எதிர்பார்த்த அனுகூலங்கள் யாவும் வந்து சேரும். தந்தைவழி உறவுகளால் அனுகூலம் ஏற்படும்.

அரசு வகை வரிப் பாக்கிகள் செலுத்துவதற்கு தேவையான  பணவுதவி கள் கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு பணியில் முன்னேற்றங்களை அடைய முற்படுவீர்கள்

கடகம்

நற்பலன்களை எதிர்பார்க்கலாம். தெய்வ சிந்தனைகள் மனதில் அமைதி தரும். முன்னேற்றங்கள் மற்றும் கௌரவத்தையும் அடைவீர்கள். தொலைதூரப் பயணங்களால் நன்மை ஏற்படும். வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். சுபச் செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை புகுத்தி, இலாபம் எனும் வெற்றிக் கனியைப் பறிப்பார்கள்.

சிலருக்கு வெற்றிகரமான தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும். தொழிலில் விஸ்தரிப்பு நடவடிக்கைகள் மூலமாக வருமான வாய்ப்புகள் பெருகும்.

கோபத்தைக் குறைத்தால் குடும்பத்தில் குழப்பங்கள் குறையும். தந்தை வழி உறவுகளால் வீண் தொல்லைகள் ஏற்படலாம். தீயவர்கள் தொடர்பால் சஞ்சலம் ஏற்பட வாய்ப்புண்டு.

சிம்மம்

பயிர், மனை இவற்றால் இலாபம் ஏற்படும். சிலருக்குத் திருமணம், சந்ததி விருத்தி ஏற்படும். நல்ல குரு வாய்க்கப் பெற்று ஆன்மீக வழியில் அறிவுத் தெளிவு ஏற்படும், தொழிலில் எதிர்பார்த்த படி பல வழிகளிலும் தனவரவு அதிகரிக்கும்.

பிறருக்கு உதவும் நல்ல எண்ணம் மேலோங்கும். அரசாங்கத்திடம் இருந்து அனுகூலமான செய்திகள் மற்றும் தகவல்கள் வந்து சேரும்.

உங்களுக்கு பயணங்களில் எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படலாம். தந்தை வழி உறவுகள் மூலம் உதவி இருக்காது. மேலதிகாரிகளால் அரசுப் பணியாளர்களுக்கு புதிய பதவியும், பொறுப்பும் கிடைக்கும். சிலருக்கு அரசாங்க விருதுகள் கிடைக்கும். தொலைதூரப் பயணங்களால் நன்மை ஏற்படும்.

கன்னி

பெண்களின் அழகும், பொலிவும், அறிவுத் திறனும் கூடும்.  தொலைதூர செய்திகள் மூலம் இல்லத்தில் மகிழ்ச்சி பெருகும். வீட்டில் சுப காரியங்கள் அனைத்தும்  சிறப்புற, வெற்றிகரமாக நடக்கும். சிலருக்கு உழைப்பு அதிகமாகி அதற்கேற்றார் போல் ஆதாயமும் அதிகரிக்கும். புதிய நண்பர்கள் சேர்க்கை, தொழில் இலாபம் ஆகியவை ஏற்படும்.  கற்பனை வளம் பெருகும்.

தாய் மூலமாக நன்மைகள் ஏற்படும். தொழில் விஷயமாக தீட்டிய முக்கியத் திட்டங்கள் நிறைவேற எடுத்த நடவடிக்கைகள் வெற்றி பெறும்.

வியாபாரிகளுக்கு வங்கிக் கடன்கள் உடனடியாக கிடைக்கும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை. பணியில் உள்ளவர்கள்  அக்கறையுடன் செயல்பட்டு, பணி செய்ய பதவி உயர்வுகள் தேடி வரும்.

துலாம்

மனைவி மூலம் மட்டற்ற மகிழ்ச்சி நிலவும். எதிர்பாராத பண வரவுகள் ஏற்படும். பணம் சம்பாதிப்பதில் ஆக்கமும், ஊக்கமும் ஏற்படும். அதன் காரணமாக நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக தனவரவு இருக்கும். புதிய தொழில் முயற்சிகள் அரசு உதவியுடன் வெற்றி பெரும். கல்வியில் தேர்ச்சி, தெய்வ சிந்தனை மற்றும் தர்ம சிந்தனையும் ஏற்படும்.

சிலருக்கு உயர் ரக வாகனங்கள் கிடைக்கும். பிரபலமானவர்களின் ஆறுதலும், அன்பும் கிடைக்கும்.  பயணத்தின் மூலம் ஆதாயங்கள் ஏற்படும். அரசு வழியில் எதிர்பார்க்கும் சகாயங்கள் அனைத்தும் தாமதம் இன்றிக் கிடைக்கும்.

உடன் பிறந்தவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. தந்தை வர்க்கத்தினரால் நன்மைகள் பல ஏற்படும்

விருச்சிகம்

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் மூலமாக பணமும், புகழும் கிடைக்கும். தொய்வின்றி உங்கள் பணிகளை கடமையுணர்வுடன் நிறைவேற்றும் அரசுப் பணியாளர்கள் உயர் அதிகாரிகளின் ஆதரவு நிச்சயம் பெறுவர் இருக்கும்.

அன்புக்கு இனியவர்களால் உங்கள் கண்ணீர் துளிகள் துடைக்கப்படும். சோம்பல் அகற்றி சுறுசுறுப்புடன் இருப்பது நல்லது.

உங்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு கூடிய உழைப்பு, பிறரால் கவனிக்கப்பட்டு, ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். அரசு ஆதரவு, அரசியல்வாதிகளின் ஆதரவு இருக்கும்  அதிகாரம் மிக்க பதவி  உயர்வு ஏற்படலாம். தேவையற்ற, எதிர்பாராத செலவுகளால் பணமுடை ஏற்படும்.

தனுசு

பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். அவள் மூலம் பூரண சுகம் கிடைக்கும்.  புதுத்தெம்பு, உற்சாகமும் கூடும். பல வகையான உயர்ந்த வாகன வசதி அமையும். சிலருக்குப் சிலருக்கு ஆரோக்கியக் குறைவு ஏற்படலாம்.

சிலருக்கு வீண் பேச்சு, வீண் அலைச்சல் மற்றும் வீண் செலவுகள் ஏற்படும். பிரபலம் அடையும் வகையில் மிகப் பெரிய சாகசங்களை, சாதனைகள் புரிவீர்கள்.

அதிகாரிகளுடன் வீண் சச்சரவுகளை விலக்கினால் பணியில் எதிர்பார்த்த அளவுக்கு மேலாக உயர்வுகள் கிடைக்கும்.  . மிகக் கடினமான வேலைகளையும் தன்னம்பிக்கை காரணமாக சிறப்பாக செய்து முடிப்பீர்கள். அரசு வேலைக்கு மனு செய்தவர்கள் அனுகூலமான பதில்களை எதிர்பார்க்கலாம்.

மகரம்

குடும்ப சந்தோஷம் குறைவில்லாது நிறைந்திருக்கும். பண விஷயத்தைப் பொறுத்தவரை திருப்திகரமான வாரமாக இருக்கும். வீட்டில் திருமண வைபவங்களை எதிர்பார்க்கலாம். வேலையில் சிரத்தையும், கடின உழைப்பும் உங்களுக்குத் தொழிலில் நல்ல முன்னேற்றங்களை தரும்.

அப்போதுதான் உங்கள்  கஜானாவும் பணத்தால் நிரம்பும். தட்டிக் கொடுத்து வேலை வாங்கினால் உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்கள் வேலையில் கை கொடுப்பர்.

அதன் காரணமாக உற்பத்தி பெருகி, லாபம் அதிகரிக்கும். மற்றவர்களிடம் பேசும் போது எச்சரிக்கையுடன் பேசவும். நன்கு ஆராய்ந்து பங்குச் சந்தை மற்றும் போட்டி பந்தயங்களில் ஈடுபட்டால் இழப்பைத் தவிர்க்கலாம்.

கும்பம்

சுபகாரிய நிகழ்வுகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணத்துக்கு முயற்சிகள்  மேற்கொள்ளப்படும். சுகமான சுற்றுலாப் பயணங்களால் மனதில் சந்தோஷம் பொங்கும்.

சிறப்பான உடை அணிந்து மிடுக்காக உலா வருவீர்கள். அன்னையின் அன்பு, அரவணைப்பு மற்றும் உதவிகளும் ஆதரவாய் இருக்கும்.

மனைவியின் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். குடும்பத்தில் வீண் செலவுகளை குறைத்து பணத்தை சேமித்து வைப்பது எதிர்காலத்துக்கு  நல்லது. வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிக்க கடினமாக உழைத்தால் மட்டுமே ஆதாயம் கிடைக்கும். விவசாயிகளுக்கு அதிக மகசூல் ஏற்பட்டு, லாபத்தால் வசதிகள் பெருகும்.

மீனம்

சீரான பொருளாதார உயர்வினால் எப்போதும் மனதில் மகிழ்ச்சி பொங்கும். புண்ணியத் திருத்தல யாத்திரைகள் செல்வதால் மகிழ்ச்சியும் மன அமைதியும் ஏற்படும். பொன் பொருள் ஆபரணங்கள் ஆகியவை விதவிதமாகக் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் தேர்ச்சி உண்டாகும்.

தொழிலில் ஏற்படும் இலாபம் மூலமாக பண வருவாய் அதிகரிக்கும். வியாபாரிகள் எதிர்பார்த்தபடி வங்கிக் கடன்கள் சிரமமின்றி கிடைக்கும்.

கடின உழைப்பால் நீங்கள் பெறும் வெற்றிகளால் அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். மங்கையரால் மன மகிழ்ச்சியும், அரசாங்கத்தால் இலாபமும் ஏற்படும்.  சம்பாதித்த பணத்தை புதிய முதலீட்டுத் திட்டங்கள் மூலமாக சேமிக்க முற்படுவீர்கள்.

உங்கள் வீட்டில் பலம்புகள் வருவதையும் பாம்பு கனவில் வருவதையும் தடுக்கும் அற்புத கிழங்கு இங்கு க்ளிக் செய்து பெற்றுக்கொள்ளுங்கள்

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...