மழைக்கால நோய்கள்

Date:

Share post:

மழைக்கால நோய்கள்

மழைக்கால நோய்கள்

கொசு வரும் முன்னே நோய் வரும் பின்னே என்ற வார்த்தைக்கு  ஏற்ப கோடை வெயில் முடிந்து தற்போது பல இடங்களில்  மழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனிடையே மழைக்கால நோய்கள் மக்களை பாதிக்கச் செய்துள்ளது.

கொசுக்களால்தான் அதிகளவு நோய் பரவுகிறது. நாம் வசிக்கும் இடத்தை மிகச் சுகாதாரமாக வைத்திருந்தால் மழைக்கால நோய்களை தவிர்க்கலாம்.

மலேரியா

காய்ச்சல், உடல் நடுக்கம், தசை வலி மற்றும் சோர்வு ஆகியவைகள் மலேரியாவின் அறிகுறிகளாகும். மலேரியா காய்ச்சல் பெண் அனாஃபிலிஸ் என்ற கொசுக்களால் ஏற்படுகிறது.

இவ்வகை கொசுக்கள் தண்ணீர் தேங்கியிருக்கும் இடத்தில் இனப்பெருக்கமாகும்.

டெங்கு

டெங்கு காய்ச்சலும் கொசுக்களால் ஏற்படுவதுதான். இக்காய்ச்சல் வந்தால் உடல் வலி, மூட்டு வலி மற்றும் தடிப்புகள் போன்றவை உண்டாகும். நோய் வருவதற்கான முக்கிய காரணம் டைகர் கொசுக்கள்தான்.

இந்த கொசுக்கள் வராமல் தடுப்பதற்கு பூச்சி மருந்துகளைப் பயன்படுத்த  வேண்டும்.

சிக்கன்குனியா

ஏடிஸ் கொசுக்கள் கடிப்பதால் வருவது சிக்கன்குனியா. திடீரென வரும் காய்ச்சலோடு சேர்ந்து கடுமையான மூட்டு வலி இருக்கும். ஏடிஸ் கொசுக்கள் வீட்டில் வைத்திருக்கும் தண்ணீரில்தான் அதிகம் இனப்பெருக்கமாகும்.

இந்த கொசுக்கள் பகல் நேரத்தில் கடிக்கும். இதனை தடுக்க தண்ணீர் தொட்டிகளை சுத்தப்படுத்தி, கொசுக்களை அழிக்கும் பூச்சி மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும்.

டைபாய்டு

டைபாய்டு என்ற நோய், தண்ணீரினால் வருவதாகும். டைபாய்டு வர காரணமாக இருப்பது எஸ்.டைஃபி என்ற பாக்டீரியா. அசுத்தமான உணவு மற்றும் தண்ணீரை உபயோகிப்பதால் இந்நோய் ஏற்படுகிறது.

மேலும் சுகாதாரமற்ற சீர்கேட்டினாலும் உருவாகும். காய்ச்சல், தலைவலி, சோர்வு, வலி மற்றும் தொண்டைப்புண் ஆகியவை டைபாய்டின் அறிகுறி.

வயிற்றுப்போக்கு

மழைக்காலத்தில் எளிதில் தாக்கும் நோய்களில் வயிற்றுப்போக்கும் ஒன்றாகும். இதனால் உடலில் உள்ள நீர்ச்சத்து அதிகளவு வெளியேறுவதால், உடல் சோர்வடையும். உடனே சிகிச்சை பெறுவது அவசியம்.

வயிற்றுப்போக்கு பெரும்பாலும் சுகாதாரமற்ற உணவு மற்றும் தண்ணீரால் ஏற்படுகிறது. கடுமையான வயிற்றுப்போக்கு (அக்யூட் டையரியா), தீவிரமான வயிற்றுப்போக்கு(குரோனிக் டையரியா), இவை இரண்டையுமே வரும் முன் தடுக்க முதலில் சுத்தத்தை  நாம் கடைபிடிக்க வேண்டும். சாப்பிடுவதற்கு முன் கையை நன்றாக கழுவ வேண்டும். எக்காலத்திலும் வெந்நீரை குடிப்பது நல்லது.

மஞ்சள் காமாலை

மஞ்சள் காமாலையை ஏற்படுத்தும் கிருமிகள், சுத்தமில்லாத உணவுகள் மற்றும் தண்ணீரின் மூலம் வருகிறது.

உடல் சோர்வு, மஞ்சள் நிற சிறுநீர், வாந்தி மற்றும் ஈரலில் அழற்சி அறிகுறிகள் தென்படும். கொதிக்க வைத்த தண்ணீர் மற்றும் சத்தான பானங்களை குடிக்க வேண்டும்.

வைரஸ் காய்ச்சல்

மிதமான முதல் அதிகமான காய்ச்சல் தான் இதற்கான அறிகுறி. இக்காய்ச்சல் தொடர்ந்து 37 நாட்கள் வரை நீடிக்கும்.

சளியும் இருமலும் சேர்ந்து இருக்கும். நிலவேம்பு கஷாயம் குடித்தால் இந்நோயிலிருந்து விடுபடலாம்.

 

அற்புதம் செய்யும் ஆயுர்வேதம் பற்றி தெரிந்து கொள்ள

http://sindinga9news.com/2022/11/15/%e0%ae%86%e0%ae%af%e0%af%81%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%87%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/

சிந்திங்க9 பொருட்களை வாங்குவதற்கு

https://www.sindinga9.com/

Previous article
Next article

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...