மண்ணீரல் குறைபாடு

Date:

Share post:

மண்ணீரல் குறைபாடு

மண்ணீரல்

நம் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் சரியாகச் செயல்பட்டால்தான் நோயின்றி வாழமுடியும்.

மூளை, நுரையீரல், இதயம் மற்றும் சிறுநீரகம் தவிர, மண்ணீரலும் மனித உறுப்புகளில் மிக முக்கியமான ஒன்றாகும்.

நமது உடலில் கல்லீரலுக்கு மிக அருகில் இருப்பது மண்ணீரல். நிணநீர் உறுப்புகளில், இது உடலின் மிகப்பெரிய உறுப்பு ஆகும்.

இது நார்ச்சத்து பிணைய கட்டமைப்பிற்குள் உள்ள ரெட்டிகுலர் செல்களால் ஆனது.

இது ஒப்பீட்டளவில் சிறியதாக இருந்தாலும், நிமோனியா மற்றும் மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் சில வகையான பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடு
வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மண்ணீரல் மக்களிடையே அளவு மற்றும் வடிவத்தில் வேறுபடுகிறது, ஆனால் இது பொதுவாக முஷ்டியின் அளவு, ஊதா நிறம் மற்றும் நான்கு அங்குல நீளம் கொண்டது. இது வயிற்றின் இடதுபுற மேற்புறத்தில் உள்ள உறுப்பு ஆகும்.

மண்ணீரலின் முக்கிய செயல்பாடுகள்

மண்ணீரலின் முக்கிய செயல்பாடுகள் என்னவென்றால் இரத்தத்தை உருவாக்குதல், சேமித்தல், வடிகட்டுதல் மற்றும் நோயெதிர்ப்பு திறனை உருவாக்குதல்.

பழைய இரத்த சிவப்பணுக்கள் மண்ணீரலில் மறுசுழற்சி செய்யப்படுகின்றன; பிளேட்லெட்டுகள் மற்றும் வெள்ளை இரத்த அணுக்கள் அங்கு சேமிக்கப்படுகின்றன. மண்ணீரல் மனிதனின் பலவித எண்ணங்களையும் உருவாக்கி ஊக்கப்படுத்துகிறது; எனவே இது மன வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

முதிர்ந்த இரத்த சிவப்பணுக்களை அழிப்பது, உடல் மற்றும் நரம்புமண்டலத்தைத் தூண்டுவது, இதயம் மற்றும் மூளையின் செயல்பாடுகளை சீராக வைத்திருப்பது மண்ணீரலின் முதன்மைப் பணிகளாகும்.

மண்ணீரல் ஆரோக்கியமாக பராமரிக்கப்படாவிட்டால் இதயம் தொடர்பான நோய்கள் உருவாக வாய்ப்புள்ளது. சில நேரங்களில் இது உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும், அதன் விளைவாக மாரடைப்பு ஏற்படலாம்.

இது இரத்தத்தில் உள்ள தேவையற்ற நுண்ணுயிரிகளை அழித்து சிறுநீரக செயல்பாட்டையும் தூண்டுகிறது.

இதேபோல், மண்ணீரல் இரத்த ஓட்டத்தில் இருந்து கிருமிகள் போன்ற வெளி உயிரினங்களை வடிகட்டுவதற்கான ஒரு உறுப்பாகவும் செயல்படுகிறது.

மண்ணீரல் செய்யும் மற்ற முக்கியப் பணி இரத்தம் மூலம் பரவும் நோய்களுக்கு எதிராக நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பது மற்றும் வியர்வை சுரப்பிகளைத் தூண்டுவது ஆகும்.


மண்ணீரலில் ஏற்படும் கோளாறுகள்

விரிவடைந்த மண் ஈரல் ஹைப்பர்ஸ்ப்ளெனிசத்திற்கு (hypersplenism) வழிவகுக்கிறது, இது அதீத செயல் நிலைகொண்ட நிலை ஆகும்.

நீங்கள் அதிகம் சாப்பிடாவிட்டாலும், விரிவடைந்த மண்ணீரல் வலி மற்றும் வயிறு நிறைந்த மாதிரி சங்கடமான உணர்வை ஏற்படுத்தும்.

ஸ்ப்லீனோமெகலி (Splenomegaly) ஒரு ஆபத்தான நிலை, ஏனெனில் இந்த நிலையில் மண்ணீரல் கிழிந்து இரத்தக்கசிவு ஏற்படலாம். கல்லீரல் தொடர்பான பிரச்சனைகள் மண் ஈரல் பெரிதாக இருப்பதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.

சிதைந்த மண்ணீரல் என்பது மண்ணீரலில் உள்-இரத்தப்போக்கு இருக்கும்போது ஏற்படும் ஒரு நிலை. மலேரியா மற்றும் இதர தொற்று நோய்களான மோனோநியூக்ளியோசிஸ் (infectious mononucleosis) போன்ற சில நோய்கள் மண்ணீரல வீங்குவதற்கும், அதன் பாதுகாப்பு கவசம்  மெலிவதற்கும் காரணமாக அமைகிறது.

த்ரோம்போசைட்டோபீனியா (Thrombocytopenia) என்பது மண்ணீரல் தேவைக்கு அதிகப்படியான பிளேட்லெட்டுகளை சேமிக்கும் ஒரு நிலை. பிளேட்லெட்டுகள் இல்லாமல், காயம் அல்லது வெட்டு ஏற்பட்ட இடத்தில் இரத்தம் விரைவாக உறையாது. இது அதிகப்படியான இரத்த இழப்பை ஏற்படுத்துகிறது.

மண்ணீரல் அழற்சி (Splenic Infarction) என்பது மண்ணீரலுக்கு இரத்த விநியோகம் குறையும்போது ஏற்படும் ஒரு நிலை. இது பெரும்பாலும் வலி நிறைந்ததாக இருக்கும்.

மண்ணீரல் சேதத்தின் அறிகுறிகள்

வேகமாக இதயத்துடிப்பு, குமட்டல், தலைச்சுற்றல், எடை அதிகரிப்பு மற்றும் அடிவயிற்றில் பயங்கர வலி, உலர்ந்த மற்றும் கடினமாநாக்கு ஆகியவை மண்ணீரலின் சிதைவின் அறிகுறிகளாகும். மற்ற அறிகுறிகள் முழு உடலிலும் வலி, கால்கள் வீக்கம், சாப்பிட்ட உடன் தூக்கம் வருதல், எப்போதும் சோர்வாக உணர்தல் மற்றும் மஞ்சள் காமாலை ஆகியவை அடங்கும். சில நேரங்களில் இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீர் அடங்காமை அதிகரிக்கும்.

மண்ணீரல் சேதத்திற்கான காரணங்கள்

*அடிக்கடி கோபம் மற்றும் எரிச்சல் அடைபவர்களுக்கு மன அழுத்தம் உள்ளவர்களுக்கும் மண்ணீரல் பாதிக்கப்படும்.
*மதுப்பழக்கம், புகைபிடித்தல் போன்றவற்றால் இந்நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
*இரத்தத்தில் பித்த நீர் அதிகரிப்பதால், மண்ணீரலில் பாதிப்பு ஏற்படுகிறது.
*இதயம் இரத்தத்தை உறிஞ்சுவது போல் மண்ணீரலும் இரத்தத்தை உறிஞ்சுதல்.
*கல்லீரல் அழற்சி, வயிற்றில் புண், பித்தப்பை மற்றும் குடல் ஆகிய வற்றால் மண்ணீரல் பாதிக்கப்படலாம்.


சிகிச்சை முறைகள்

சிகிச்சையானது சீர்குலைவு மற்றும் தீங்கின் தீவிரத்தை பொறுத்துள்ளது. தீவிரமில்லா நிலையில் மதுவைத் தவிர்த்தல் மற்றும் உணவில் சில மாற்றங்கள் கொண்டு சிகிச்சை அளிக்கலாம்.

சிதைந்த மண் ஈரல் அல்லது விரிவடைந்த மண்ணீரலுக்கு அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்படுவது பொதுவான சிகிச்சை ஆகும். இந்த சிறிய உறுப்பு மிக முக்கியமான பணிகளைச் செய்தாலும், மண் ஈரல் இல்லாமல் வாழ முடியும். நிணநீர் கணுக்கள் மற்றும் கல்லீரல் போன்ற பிற திசுக்கள் மண்ணீரலின் பணிகளைச் செய்யமுடியும்.

இருப்பினும், மண் ஈரல் அகற்றப்பட்டவர்களுக்கு நோய்த்தொற்றுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கும் பிற நோய்களைக் கொண்டவர்கள் சீக்கிரம் நோய்த் தொற்றுக்கு உள்ளாக வாய்ப்புள்ளது.

ஆரோக்கியமான மண்ணீரலுக்கு மருத்துவரின் ஆலோசனை

நீங்கள் ஆரோக்கியமான மண் ஈரல் , நிணநீர் மண்டலம் மற்றும் நோயெதிர்ப்பு அமைப்பு சரியாக செயல்படுவதை உறுதிசெய்ய, ஒருவர் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும், தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும் மற்றும் ஆரோக்கியமான எடையை பராமரிக்க வேண்டும். பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்றவற்றை சீரான மற்றும் போதுமான அளவு உட்கொள்வதன் மூலம் வெளிப்புறத் தொற்று மற்றும் நோய்களிலிருந்து பாதுகாக்கும் நோயெதிர்ப்புச் சக்தியை நன்றாகப் பராமரிக்க முடியும்.

மண்ணீரலை வலுப்படுத்த உதவும் சில காய்கறிகள், கீரைகள், கேரட், பீட்ரூட், வெள்ளரி, முள்ளங்கி, புதினா, பூண்டு, தேங்காய், முளை விட்ட தானியங்கள் மற்றும் சின்ன வெங்காயம்.

கொய்யா, திராட்சை, ஆரஞ்சு, அன்னாசி, பப்பாளி, மாதுளை, அத்திப்பழம், ஸ்ட்ராபெர்ரி, பிளம்ஸ் போன்ற பழங்கள் மண்ணீரலை ஆரோக்கியமாக பராமரிக்க உதவுகின்றன.

இந்த காய்கறிகள் மற்றும் பழங்களில் உள்ள மெத்தியோனைன் (methionine) இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியிலும், மண்ணீரல் மற்றும் பித்த சுரப்பிகளின் செயல்பாட்டிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

சிறியதாக இருந்தாலும், மண்ணீரல் ஒரு முக்கியமான உறுப்பு. இது தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடவும், பழைய அல்லது சேதமடைந்த இரத்த அணுக்களை அகற்றவும், உங்கள் உடலில் திரவங்களைச் சீராக பரவ வைக்கவும் கடினமாக உழைக்கிறது.

பல கோளாறுகள், நோய்த்தொற்றுகள், காயங்கள் மற்றும் நோய்கள் மண்ணீரலில் சிக்கல்களை ஏற்படுத்தலாம் மற்றும் மண்ணீரலின் ஆரோக்கியமான பராமரிப்பு ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உதவும்.

 

 

மீன் வளர்ப்பு தரும் ஆனந்தம் பற்றி தெரிந்து கொள்ள

http://sindinga9news.com/2022/11/29/%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%a4%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a9%e0%ae%a8%e0%af%8d/

 

சிந்திங்க9 பொருட்களை வாங்குவதற்கு

https://www.sindinga9.com/

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...