முதுமையை வெல்ல

Date:

Share post:

முதுமையை வெல்ல

முதுமையை

 

  • புதிய உந்துசக்தியை உருவாக்க புதிதான, உங்களுக்கு மிகவும் தேவையான சவால் ஒன்றை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
  • இளைஞர்களோடு பழகுங்கள், 25 வயதில் இருந்த உத்வேகம் அவர்களிடமிருந்து உங்களுக்கு  மீளக் கிடைக்கும்.
  • எப்போதுமே புதிய விஷயங்களைத் தேடுங்கள்  புதிய  மனிதர்களிடம்  பேசிப் பழகுங்கள்.
  • எப்போதும் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள   கடினமான  இலக்கை  முன்னிலைப்படுத்தி  அதனை  நோக்கி  நிதானமாக , ஆனால்  உறுதியோடு  செல்லுங்கள்.
  • புதிய உந்துசக்தியை உருவாக்க புதிதான, உங்களுக்கு மிகவும் தேவையான சவால் ஒன்றை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.
  • அழகான உடைகளை  ரசனையுடன்  தேர்வு  செய்து,  மிடுக்காக  உடுத்துங்கள். 50 வயதில் நரையும்,  திரையும்  வழுக்கையும்  அழகுதான்.
  • உலகின்  மிகப்பெரிய  சாதனைகளைச் செய்தவர்கள்  பலரும் 50+காரர்கள்தான். அவ்வப்போது உங்களுடன் ஒத்த கருத்துள்ள நண்பர்களுடன் புதிய இடங்களுக்குப் புதிய  அனுபவங்களைத் தேடிப் பயணம் செய்யுங்கள்.
  • வேறுபட்ட  மனிதரோடு  உரையாடுங்க.. திசையறியா  ஆர்வமூட்டும்  பயணங்கள்  நம்மை பள்ளிப்  பருவத்திற்கு  இட்டுச் சென்று  துள்ளிக்  குதிக்க  வைக்கும்.
  • புதிய நவீன  சிந்தனையாளரா்களின்  புத்தகங்களைத் தேடி  நிறைய  படியுங்கள்.  உங்கள்  மூளைக்குத்  தீனி போட நிறைய, நிறைய  புதிய  விஷயங்களைத்  தேடிப் படியுங்கள்.
  • நகைச்சுவைக் கதைகளை,  நிகழ்வுகளை, ஒளிமங்களை விரும்பிக்  காணுங்கள். சிரித்துப் பேசுங்கள்,  பிறர் சிரிக்கப் பேசுங்கள்,  உங்களைச் சுற்றி  ஒரு ஒளி வட்டம்  நிலையாகும்.
  • விரோதிகளை  விலக்குங்கள்,  பெருமைக்காரர்களை,  பொறாமைக்காரர்களைக் கால விரயம்  கருதி  ஒதுக்குங்கள்.  மன ஆரோக்கியம்  உடல் ஆரோக்கியம்  பேணுங்கள், நடைப்பயிற்சி, மூச்சுப்பயிற்சி, சிறு சிறு  ஆசனங்கள்  தவறாது  செய்யுங்கள்.
  • வாரம்  ஒரு  முறையாவது  உங்கள்  இணையுடன் சிரித்து,  மகிழ்ந்து  உண்டு  மகிழுங்கள்.
  • பொதுச்சேவையில்  நாட்டம் கொள்ளுங்கள். ஏரி, குளம், தூய்மை, சுற்றுச்சூழல், பசுமை, சமூக நேர்மை  காத்தலில்  ஆர்வம்  கொள்ளுங்கள்.
  • உங்களின்  இன்பத்தில் பங்கெடுத்துக் கொள்பவர்அனைவரையும் பாராட்டுங்கள். அவர்களிடம்  நிரந்தரமாக, தொடர்பு வைத்திருங்கள்.
  • வாழ்வின் உன்னதம்  என்பது ஏற்கெனவே  உங்களுக்கு  முழுவதுமாக நிச்சயம்  வந்துவிட்டது என்று நம்புங்கள்.
  • உங்களுக்கு மகிழ்ச்சியளிக்காதவை  எதுவாக  இருந்தாலும்  அவைகளிடம் இருந்து  விலகி  ஓடிவிடுங்கள்.
  • யாரிடமும்  அதிகளவில்  கோபப்படாதீர்கள்.  மகன், மகள்  மற்றும்   குறிப்பாக  மருமகளைத் திட்டாதீர்கள். முதலில்  நம்மைச் சார்ந்தவர்களுக்கு, பின்னர்  அடுத்தவர்களுக்கு, உதவி தேவைப்படுபவர்களுக்கு, உங்களால்  இயன்ற   வகையில்  உதவுங்கள்.  அவர்கள்  நன்றியில் உங்களை  நீங்களே  புதிதாக  ரசித்து  மகிழ்வீர்கள்.
  • மற்றவர்களுடைய  வாழ்க்கையுடன் உங்களுடைய வாழ்க்கையை  ஒப்பிட்டு  உங்களை  தாழ்த்திக் கொள்ளாதீர்கள்.
  • தினமும்  10லிருந்து 30 நிமிடங்கள்  கட்டாயம்  நடைப்பயிற்சி  செய்யுங்கள்.  அவ்வாறு  செல்லும்போது  சிரித்த  முகமாகச் செல்லுங்கள்.
  • எப்போதுமே முதல் பகுதியைவிட  இரண்டாம்  பகுதிதான்  நாம் வாழ்ந்த  வாழ்வின் அர்த்தங்களை  நிர்ணயிப்பதில்  பெரும்பங்கு  வகிக்கிறது.
  • நீங்கள் எந்த மனநிலையில் இருந்தாலும் நன்றாகக் குளித்து,  சுத்தமான  ஆடையை  அணிந்துகொள்ளுங்கள்.தினசரி  மற்றவருக்குப்  பயனளிக்கும்  வகையில் ஒரு சிறிய  செயலையாவது  செய்யுங்கள்.
  • மறந்தும்  சாய்வு  நாற்காலிவாசிகள்  பக்கம் ஒதுங்கி  விடாதீர்கள், உங்களை அவர்கள்  பக்கத்திலேயே  படுக்க வைத்துவிடுவார்கள்.பேகக் குழந்சைகளுடன் கொஞ்சி விளையாடி, நேரத்தைச் செலவிடுங்கள். அது உங்களை உற்சாகமாக  வைக்கும்.
  • தினமும்  ஒரு 10 நிமிடமாவது  எந்த சிந்தனைகளும்  இல்லாமல்  அமைதியாக  கண்ணை மூடி  அமருங்கள்.
  • எப்போதும்  இரக்கம், உற்சாகம், ஊக்கம் , கருணை ஆகிய குணங்கள் மனதில்  நிறைந்திருக்குமாறு  பார்த்துக் கொள்ளுங்கள்.
  • மூளையும், மனசும், உடலும் சரியாக  இயங்க  ஏற்பாடு செய்துவிட்ட  பிறகு  ஆரோக்கியத்தில்  என்ன பிரச்னை  வந்துவிடப் போகிறது. மேற்சொன்ன விஷயங்களைச் சரியாகச் செய்தால் 50+ யிலும் ஆரோக்கியம்  பற்றிக் கவலைப்படத்  தேவையே  இல்லை.. முதுமையை  வென்று சாதிக்கலாம்.

 

ப்ரீ – டயாபடீஸ் பற்றி தெரிந்து கொள்ள

http://sindinga9news.com/2023/01/27/%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b0%e0%af%80-%e0%ae%9f%e0%ae%af%e0%ae%be%e0%ae%aa%e0%ae%9f%e0%af%80%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf/

 

சிந்திங்க9 பொருட்களை வாங்குவதற்கு

https://www.sindinga9.com/

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...