ஹீரோவுடன் நெருக்கமான காட்சிகள்: படத்தை உதறிய வாணி போஜன்

Date:

Share post:

ஹீரோவுடன் நெருக்கமான காட்சிகள்: படத்தை உதறிய வாணி போஜன்

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் நடித்து வரும் வாணி போஜன், தற்போது ஊர்க்குருவி, பகைவனுக்கு அருள்வாய், பாயும் ஒளி நீ எனக்கு, லவ், ரேக்ளா, ஆர்யன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் அவர் நடித்த ‘செங்களம்’ வெப் சீரிஸ் ஓடிடியில் வெளியானது. இந்நிலையில் ஒரு பேட்டியில் இதுவரை தான் தவறவிட்ட படங்கள் குறித்து பேசியுள்ளார்.

அதில், கடந்த 2021ம் ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற ‘பேச்சுலர்’ பட வாய்ப்பை தவறவிட்டது குறித்து வாணி போஜன் கூறியது: ‘பேச்சுலர்’ படத்தில் ஆரம்பத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு தான் முதலில் வந்தது.

ஆனால், இந்தப்படத்தின் கதாபாத்திரத்திற்கு நான் செட் ஆவேனா என்ற சந்தேகம் இருந்தது. இந்தப்படத்தில் ஹீரோவுடன் நெருக்கமான காட்சிகள் இருப்பது எனக்கு தெரியும்.

நான் ‘பேச்சுலர்’ படத்தில் நடித்தால், எனக்காக ஹீரோயின் கேரக்டரில் பல காட்சிகளை இயக்குனர் மாற்றியிருப்பார். அவ்வாறு மாற்றுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. எனக்காக எந்த காட்சியையும் இயக்குனர் மாற்றக்கூடாது.

இதற்காகவே அந்தப்படத்தில் இருந்து நான் விலகிவிட்டேன் என தெரிவித்துள்ளார் நடிகை வாணி போஜன்.‘பேச்சுலர்’ படத்தில் வாணி போஜனுக்கு பதிலாக திவ்ய பாரதி, ஜிவி. பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக நடித்தார்.

லிவ் இன் ரிலேஷன்ஷிப் பற்றி பேசிய இந்தப்படத்தில் ஏகப்பட்ட ரொமான்ஸ் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...