இன்றைய ராசிபலன் 9/4/23

Date:

Share post:

இன்றைய ராசிபலன் 9/4/23

மேஷம்

மேஷம்: சந்திராஷ்டமம் இருப்பதால் வேலைச்சுமை இருந்து கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். உறவினர் நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். சிலர் உங்களை மட்டம் தட்டிப் பேசினாலும் உணர்ச்சி வசப்படாதீர்கள்.

வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் ஈகோ அதிகரிக்கும். தான் உண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.

ரிஷபம்

ரிஷபம்: நம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்குவீர்கள். உங்கள் பிள்ளைகள் உங்களது பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். மனைவி மக்கள் வழியில் ஆதரவு பெருகும். தாயாரின் உடல் நிலை சீராகும்.

உத்தியோகத்தில் உங்களை எல்லோரும் மதிப்பார்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

மிதுனம்

மிதுனம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.

வியாபாரத்தில் புது தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். தொட்டது துலங்கும் நாள்.

கடகம்

கடகம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் வரலாறு குறித்து யோசிப்பீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். பழைய சிக்கலில் ஒன்று தீரும்.

வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். கனவு நனவாகும் நாள்.

சிம்மம்

சிம்மம்: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும்.

வியாபாரத்தில் அதிரடியான சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.

கன்னி

கன்னி: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரைச் சந்திக்க நேரிடும். வீடு மனை வாங்குவது லாபகரமாக அமையும்.

விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். உத்தியோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். நினைத்ததை முடிக்கும் நாள்.

துலாம்

துலாம்: கணவன் – மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். அழகும் இளமையும் கூடும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள்.

வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். புது நட்பு மலரும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது. பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள்.

உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த முயற்சிப்பார்கள். உத்தியோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி இருக்கும். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.

தனுசு

தனுசு: குடும்பத்தை பற்றிய கவலைகள் வந்து போகும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. உடல் அசதி சோர்வு வந்து நீங்கும். திடீர் பயணங்கள் செலவுகளால் திணறுவீர்கள்.

வியாபாரத்தில் புதிய முதலீடு செய்வீர்கள்.  உத்தியோகத்தில் சக ஊழியருடன் விட்டுக்கொடுத்துப் போங்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

மகரம்

மகரம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். சில வேலைகளை விட்டுக்கொடுத்து முடிப்பீர்கள்.

வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடைய ரசனையை புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.

கும்பம்

கும்பம்: பிரச்சினையின் ஆணி வேரை கண்டறிவீர்கள்.  உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். உறவினர்கள் உங்களுக்கு உதவுவார்கள். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள்.

வியாபாரத்தில் வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரை தருவார்கள். மதிப்புக் கூடும் நாள்.

மீனம்

மீனம்: குடும்பத்தில் மனம் விட்டு பேசுவீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். வீடு மற்றும் வாகனத்தையும் சீர் செய்வீர்கள்.

தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். உற்சாகமான நாள்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...