பெரும்பாலும் அனைவரும் சருமத்தை சுத்தமாகவும் பொளிவாகவும் வைத்துக் கொள்ள வேண்டும் என்று தான் விரும்புவார்கள்.
அதற்கு கடைகளில் கிடைக்கும் பொருட்களை பாவித்து பல வகையான விளைவுகள் ஏற்படும்.
ஆகவே எந்தவொரு இரசாய பொருட்களை பயன்படுத்தாமல் ரோஜா பூவால் செய்யப்படும் ஸ்கிரப் பற்றி பார்க்கலாம்.தேவையான பொருட்கள்
ரோஜா பூ – 1 கப் (உலர்ந்தது )
பொடித்த சர்க்கரை- 1 தே.கரண்டி
தேன் – 2 தே.கரண்டி
ரோஸ் வாட்டர் – 3 தே.கரண்டி
தண்ணீர் – 1 தே.கரண்டி
செய்முறை
முதலில் ரோஜா இதழ்களை மிக்ஸியில் இட்டு அரைக்க வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் ரோஜா,சர்க்கரை, தேன், ரோஸ் வாட்டர் மற்றும் தண்ணீர் ஆகியவற்றைப் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
இந்த ஸ்க்ரப்பை உங்கள் முகத்தில் நன்றாக தேய்த்து பின் முகத்தில் 10 நிமிடம் விடவும்.
இதை பூசுவதால் பல நன்மைகள் ஏற்படுகின்றன.
சருமத்தை ஈரப்பதமாக்குகின்றது, பருக்களை குறைக்கும், வீக்கத்தை குறைக்கும், கண்களுக்கு கீழ் உள்ள கருமையை நீக்கும்.
தினமும் இரவில் தூங்கும் முன் இதை பயன்படுத்தினால் அது உங்கள் சருமத்திற்குப் பொலிவைத் தரும் என்பது குறிப்பிடத்தக்கது.