திருமண மேடையில் விளையாட்டாக துப்பாக்கியால் சுட்ட மணப்பெண் மாப்பிள்ளையின் நிலைமை என்ன தெரியுமா ?

Date:

Share post:

திருமண மேடையில் விளையாட்டாக துப்பாக்கியால் சுட்ட மணப்பெண் மாப்பிள்ளையின் நிலைமை என்ன தெரியுமா ?

இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் மணமேடையில் மணப்பெண் துப்பாக்கியை மேல் நோக்கி சுட்ட வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, பொலிஸார் அவரை தேடி வருகின்றனர்.உத்தர பிரதேசத்தின் ஹத்ராஸ் நகரில் சலீம்பூரில் திருமண நிகழ்ச்சி நடந்தது. அப்போது மணமக்கள் ஜோடியாக அமர வைக்கப்பட்டு புகைப்படங்கள் எடுக்கப்பட்டது.

அப்போது திருமணத்திற்கு வந்த நபர் மணமகளின் கையில் கைத்துப்பாக்கி ஒன்றை கொடுத்துள்ளார். அதனை வாங்கிய மணமகள் மேல்நோக்கி நான்கு முறை சுட்டுள்ளார்.அச்சமயம் மணமகன் எதுவும் தெரியாதது போல் அமைதியாக உட்கார்ந்திருந்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது.

இதுகுறித்து அறிந்த பொலிஸார் மணமகள் மீதும், துப்பாக்கியை கொடுத்த நபர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். இதனை அறிந்த இருவரும் தலைமறைவாகிவிட்டனர்.

பொலிஸார் அவர்கள் இருவரையும் தேடி வருகின்றனர். அவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வாய்ப்புள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் மணமகள் தலைமறைவானதால் மணமகன் தற்போது சோகத்தில் மூழ்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...