அதிகாலை வெந்தயம் சாப்பிடுவதால் உடம்பில் தாறுமாறாக நிகழும் அதிசயம் பற்றிய தகவல் !

Date:

Share post:

வீட்டில் சமையலறை அஞ்சறை பெட்டியில் இருக்கும் பொருட்களில் ஒன்று தான் வெந்தயம். எண்ணற்ற நன்மைகளை கொண்டுள்ள வெந்தயம் சரும பராமரிப்பு முதல் சர்க்கரை நோய் வரை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கின்றது.

வெந்தய விதைகளில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, இரும்புச்சத்து, நார்ச்சத்து, பயோட்டின், மக்னீசியம், மாங்கனீஸ், தாமிரம் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. வெந்தயம் ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகவும் உள்ளது.

பெண்களின் கூந்தல் அழகினை மேம்படுத்தும் முக்கிய பொருளாக இருக்கும் வெந்தயம், முடிவளர்ச்சியை ஊக்குவிக்கின்றது. முடி உதிர்தல், பொடுகு, நரை முடி இவற்றிற்கு தீர்வு கொடுக்கும் வெந்தயத்தினை இரவில் ஊறவைத்து பின்பு அறைத்து பேஸ்ட் செய்து, காலையில் குளிக்கும் போது தலையில் தேய்த்து குளித்தால் உடல் குளிர்ச்சியடையும்.

வெந்தயத்தின் உள்ள நார்ச்சத்து குடலில் கெட்டியான ஜெல்லை உருவாக்கி சர்க்கரைகள் மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகளை ஜீரணிக்க உதவுகின்றது. நீரிழிவு நோயாளிகளின் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கவும், இன்சுலின் உற்பத்தியை தூண்டவும் செய்கின்றது.

உடல் எடையினால் அவதிப்படுகிறவர்கள் வெந்தயத்தினை அடிக்கடி எடுத்துக் கொள்ளவும். குறிப்பாக வயிற்று கொழுப்பை எரிக்க உதவுவதோடு, பசியை குறைக்கவும் செய்கின்றது.

முகத்தில் பருக்கள் ஏற்பட்டு அசிங்கமாக இருப்பதாக நினைப்பவர்கள், வெந்தயத்தினை பயன்படுத்தவும். பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளதால், தோல் நெகிழ்ச்சித்தன்மையை அதிகரிக்கின்றது.

மலச்சிக்கல் ஏற்படாமல் செரிமானத்தை மேம்படுத்தவும் செய்கின்றது. இரப்பை மற்றும் குடல் அழற்சியை நீக்குவதுடன், பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தையும் குறைக்கும்.

மாதவிடாய் காலங்களில் வலி நிவாரணியாக இருக்கும் வெந்தயத்தயம் கெட்ட கொழுப்பை குறைப்பதால், இதய நோய் வராமலும் பாதுகாக்கின்றது.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...