ஐபிஎல் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் ஐபிஎல் போட்டிகளுக்கான QR / பார்கோடு போடப்பட்ட நுழைவு டிக்கெட்டுகளை மெட்ரோ ரயிலில் பயணம் செய்வதற்கான ரயில் டிக்கெட்டுகளாக, அரசு எஸ்டேட் மெட்ரோ நிலையம் வழியாக “பயணத்திற்கு தனித்தனியாக பணம் செலுத்த வேண்டிய அவசியமின்றி” போட்டி நடைபெறும் இடத்திற்குச் சென்று திரும்புவதற்குப் பயன்படுத்தலாம்.
தவிர, அரசு எஸ்டேட் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து (ப்ளூ லைன்) பசுமைப் பாதையில் (சென்ட்ரல் முதல் செயின்ட் தாமஸ் மவுண்ட் வரை) தங்கள் இலக்குக்குத் திரும்பும் பயணிகள், புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் மாற்றிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புளூ லைனில் இருந்து கிரீன் லைன் வரையிலான இன்டர்சேஞ்ச் ஸ்டேஷன்கள் போட்டி நேரத்திற்கு பிறகு புரட்சி தலைவர் டாக்டர் எம்ஜிஆர் சென்ட்ரல் மெட்ரோ நிலையத்தில் மட்டுமே கிடைக்கும். ஐபிஎல் மற்றும் சிஎஸ்கே ரசிகர்கள் தங்கள் பயணங்களை அதற்கேற்ப திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சேப்பாக்கத்தில் இரவு 7.30 மணிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சிஎஸ்கே எதிர்கொள்கிறது.