அடேங்கப்பா ஒரு வெத்தலையில் இத்தனை நன்மைகள் உள்ளதா ?

Date:

Share post:

நம்ம வீட்டில் இப்போதும் யாராவது ஒருத்தர் சரி வெற்றிலைப் போட்டுக் கொண்டுதான் இருப்பார்கள். ஆனால் நாம் அவர்கள் பக்கம் கூட போகமாட்டோம்.

இந்த வெற்றிலையில் எத்தனை நன்மைகள் இருக்கிறதென்று உங்களுக்கு தெரியுமா? இப்போ தெரிந்து கொள்ளுங்கள்!

வெற்றிலையானது வீட்டில் விசேட நாட்களில் அதிகம் தேடப்படுவது. அது மட்டுமல்லாமல் இது ஒரு மூலிகை இலையும் கூட இந்த வெற்றிலைக்கு தாம்பூலம், நாகவல்லி, வேந்தன், திரையல், மெல்லிலை போன்ற பல பெயர் உண்டு.

ஒரு வெற்றிலையில் இத்தனை நன்மைகளா

அதிலும் கம்மாறு வெற்றிலை, கற்பூர வெற்றிலை, சாதாரண வெற்றிலை என பல வகைகளும் உள்ளது. வெற்றிலையில் கல்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ளன.

வைட்டமின்களுடன், நார்ச்சத்தும் இருப்பதால் சீதள நோய்களை நீக்கி, உடல் இறுக்கம், குடல் புண்களை குணப்படுத்துகிறது.

வெற்றிலையின் நன்மைகள்
வெற்றிலையானது நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. புற்றுநோய்களில் இருந்து உடலை பாதுகாக்கிறது.

ஒரு வெற்றிலையில் இத்தனை நன்மைகளா

உங்களுக்கு அதிக வாய்த்துர்நாற்றம் இருந்தால் வெற்றிலையை போட்டு கொதிக்க வைத்த நீரால் வாயை கொப்பளித்தால் வாய்த்துர்நாற்றம் இல்லாமல் போகும். உணவு உண்டதும் வெறும் வெற்றிலையை மென்று தின்றாலும் வாய் துர்நாற்றம் இருக்காது, பற்களுக்கும் அதிக ஆரோக்கியத்தைக் கொடுக்கும்.

முடி உதிர்வு இருப்பவர்கள் வெற்றிலையை நன்றாக அரைத்து அதனுடன் கொஞ்சம் தேங்காய் எண்ணெய் கலந்து தலைமுடியின் வேர் வரை நன்கு தடவி 30 நிமிடங்கள் ஊற வைத்து குளித்தால் முடி உதிர்வு பிரச்சினை தீரும்.

முகத்தில் பருக்கள் இருந்தால் வெற்றிலையை அரைத்து போடலாம், வெற்றிலை போட்டு கொதிக்க வைத்த தண்ணீரால் முகம் கழுவினாலும் பருக்கள் மறையும்.

ஒரு வெற்றிலையில் இத்தனை நன்மைகளா

உடலில் வீசும் துர்நாற்றத்திற்கு வெற்றிலை எண்ணெய் அல்லது வெற்றிலை சாறு கலந்து குளித்து வந்தால் உடல் துர்நாற்றம் நீங்கும். தோலில் அரிப்பு, சொறி மாதிரியான பிரச்சனைகள் இருந்தால் வெற்றிலை போட்டு கொதித்த நீரால் குளிக்கலாம்.

இந்த தண்ணீரில் நாள்தோறும் குளித்து வந்தால் சரும பிரச்சினைகள் நீங்கும்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...