கர்நாடக தேர்தல்புலிகேசி நகர் தொகுதியில் அன்பரசனை நிறுத்துகிறார் இபிஎஸ் !
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி, கர்நாடக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை புதன்கிழமை அறிவித்தார்.
புலிகேசி நகர் தொகுதி வேட்பாளராக டி.அன்பரசனை கட்சி அறிவித்தது.
மாநிலத்தில் ஒரே கட்டமாக மே 10-ம் தேதி வாக்குப்பதிவும், மே 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும்.
2018 ஆம் ஆண்டில், இத்தொகுதியில் காங்கிரஸின் ஆர் அகண்ட சீனிவாசமூர்த்தி 81,626 வாக்குகள் வித்தியாசத்தில் ஜனதா தளத்தின் (மதச்சார்பற்ற) பி பிரசன்னகுமாரை தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.