தற்போது அதிகமானவர்கள் பாதிக்கப்படுவது இந்த சக்கரை வியாதியால் தான்.
சக்கரை அளவானது 120முதல் 140மி.கி./டெ.லி. வரை இருந்தால் சரியான அளவு இதிலிருந்து அதிகமானால் சக்கரை வியாதியை சந்திக்க வாய்ப்பு உள்ளது.
சக்கரை நோயானது இனிப்பு உணவுகள், கொழுப்பு உணவுகள் உண்பவர்களுக்கு தான் இந்த சக்கரை நோய் அதிகம் வர வாய்ப்பிருக்கிறது. மேலும், குடும்பத்தில் ஒருவருக்கு இருந்தால் உங்களுக்கும் அந்த நோய் வந்து விடும்.
இதனை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் அல்லது சக்கரை வியாதி வரவே வேண்டாம் என்று நினைத்தால் நீங்கள் உணவுகளை தினமும் உண்ண வேண்டாம்.தினமும் அதிக அளவில் சாதம் சாப்பிட்டால் இரத்த சக்கரை அளவு அதிகரிக்கும்.
வாழைப்பழத்தில் ஏராளமான சத்துக்கள் இருந்தாலும் அதனை தினமும் உண்ணும் போது இயற்கை சக்கரை மற்றும் இரத்த சக்கரை அளவை அதிகரிக்கும்.
வெள்ளை பிரட்களை மைதா மாவில் செய்வதால் இதுவும் இரத்த சக்கரை அளவை உயர்த்திவிடும்.
சக்கரை வியாதி இருப்பவர்கள் இந்த சோடா பானங்களை தவிர்த்து விடுவது மிகவும் நல்லது இதனால் நாளுக்கு நாள் சக்கரை வியாதி அதிகரித்துக் கொண்டே போகுமாம்.
உருளைக்கிழங்கில் கார்போஹைரேட் அதிகமாக இருப்பதால் இதனை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடாது.