அனைவருக்கும் தான் தக்காளிப் பழம் போல் சிவந்த நிறமுடையவராக இருக்கவேண்டும் என்பதே ஆசை.
அதற்காக பலவிதமான முயற்சிகளையும் மேற்கொள்கின்றனர். ஆனால், ஒரு சிலருக்கு என்ன செய்தாலும் முகம் கருமையடைந்து விடும்.
அவற்றிலிருந்து எவ்வாறு தீர்வு பெறலாம் எனப் பார்ப்போம்…முகக் கருமையை நீக்குவதற்கு தயிர் மிகச் சிறந்த பொருள். சற்றே புளித்த தயிரை எடுத்து முகம், கழுத்து பகுதிகளில் பூசி, சிறிது நேரத்தின் பின்னர் கழுவினால் முகம் பொலிவாகும்.
தயிருடன் சந்தனத்தைக் கலந்து முகத்தில் பூசி வரவேண்டும்.
சந்தனத்தை தேங்காய்ப்பாலுடன் கலந்து முகத்தில் பூசி வந்தாலும் முகம் பொலிவாகும்.
தேனுடன் எலுமிச்சம் பழச்சாற்றைக் கலந்து முகத்தில் பூசி வந்தால் நல்லது.
ரோஸ் வோட்டர், கடலை மா, கஸ்தூரி மஞ்சள் என்பவற்றை குலைத்து முகத்தில் பூசினால் கருமை விரைவில் மறையும்.
பப்பாளிப்பழம், பால், தேன் என்பவற்றை ஒன்றாகக் கலந்து முகத்தில் பூசி வரவேண்டும்.
தக்காளிச் சாற்றை எடுத்து முகத்தில் தடவி மசாஜ் செய்து வரவேண்டும்.