பிரபல கன்னட நடிகர் திடீர் தற்கொலை.. அதிர்ச்சியில் திரையுலகினர்

Date:

Share post:

பிரபல கன்னட நடிகர் திடீர் தற்கொலை.. அதிர்ச்சியில் திரையுலகினர்

கர்நாடகா மாநிலம், நெலமங்களா அருகே உள்ள ஆதர்ஷநகரில் வசித்து வந்தவர் சம்பத்ஜெயராம் இவர் திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்தார்.

கர்நாடகா மாநிலம், நெலமங்களா அருகே உள்ள ஆதர்ஷநகரில் வசித்து வந்தவர் சம்பத் ஜெயராம் (வயது35). இவருக்கு திருமணமாகி ஒருவருடம் ஆகியுள்ளது. இவரது மனைவி தற்போது 4 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

சம்பத் ஜெயராம் கன்னட திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்தார். இவர் நடித்த ஸ்ரீ பாலாஜி போட்டோ ஸ்டுடியோ சமீபத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றிருந்தது.

மேலும் இவர் நடித்த அக்னி சாஷி என்ற தொடர் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் ஆனது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு சம்பத் ஜெயராம் டிவி தொடர் நிகழ்ச்சியை முடித்துவிட்டு தாமதமாக வீடுதிரும்பியதாக தெரிகிறது.

இதனால் வீட்டில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து வீட்டில் தனது அறையில் சம்பத் ஜெயராம் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து நெலமங்களா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தூக்கில் பிணமாக கிடந்த அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் போதிய பட வாய்ப்புகள் கிடைக்காததால் விரக்தியில் இருந்த சம்பத் ஜெயராம் வீட்டில் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

மேலும் இது குறித்து சம்பத்ஜெயராம் தாய் ஜெயம்மா எனது மகனின் சாவில் மர்மம் இருப்பதாக புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டிவி நடிகர் சம்பத் ஜெயராம் தற்கொலை ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபலங்கள் பலரும் அவரது இறப்பிற்கு இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...