நீங்கள் செலவு செய்யும் பணம் பல மடங்காக திரும்ப வரும்
இன்றைய கால சூழலில் வருமானத்திற்கு மீறிய செலவுகள் இருக்கத் தான் செய்கிறது.
செலவு என்பது நல்ல விஷயங்களுக்காக செலவு செய்தால் அது ஒரு பெரிய மனக் குறையாக தெரியாது.
ஆனால் தேவையில்லாத விஷயங்களுக்காகவும், மருத்துவ செலவிற்காகவும் நம் பணம் வீண் விரையம் ஆகிக் கொண்டே இருந்தால்
அது நமக்கு சங்கடத்தை மட்டுமே தரும். இந்த சூழ்நிலையை எந்த அளவிற்கு மாற்ற முடியும் என்பது தெரியாது.
ஆனால் வருமானத்தை பெருக்கி செலவை குறைக்கலாமே தவிர, செலவே செய்யாமல் இருக்க முடியாது.
அப்படி நாம் செய்யும் 1 ரூபாய் செலவு கூட 1000 ரூபாயாக திருப்ப கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
முதலில் எந்த விஷயத்திற்காக நாம் செலவு செய்வதாக இருந்தாலும் உடனே சோர்ந்து விடக் கூடாது.
நாம் வீட்டிற்கு ஏதாவது பொருள் வாங்க வேண்டும் என்றால், அதை சந்தோஷமான மன நிலையுடன் வாங்கினால்
செலவு செய்யும் அந்த பணமானது ,திரும்ப கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.
எனவே பணம் கையில் இருந்து கொடுக்கும் போதே முடிந்த வரையில் மகிழ்ச்சியான மன நிலையில் செலவு (சில செலவுகளை தவிர்த்து )
செய்தால் அந்த நம் பணம் நம்மிடம் வரும் என்ற எண்ணத்தோடு செய்ய வேண்டும்.
பணம் நம் கையில் வைத்து இன்னொருவரிடம் கொடுக்கும் போது ஒரு சில தாந்திரீக வார்த்தைகளை பயன்படுத்தும் போது அந்த பணமானது நம் வசியமாகி மறுபடியும் நம்மிடமே வரும் என்று சொல்லப்படுகிறது.
ஆனால் இந்தப் பதிவில் நம் கையில் இருந்து பணத்தை வேறு ஒருவரிடம் கொடுக்கும் போது ஒரு குறிப்பிட்ட மந்திரத்தை சொன்னால்
அந்த பணமானது திரும்ப பல மடங்கு பெருகி நம்மிடம் வரும் என்பதையும் அது என்ன என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம்.
செலவு செய்யும் பணம் பல மடங்கு பெருக: ஓம் ஹ்ரீம் ஹம் நமஹ இந்த மந்திரத்தை நாம் பணம் கொடுக்கும் போது பணத்தை இதயத்திற்கு நேராக வைத்து
ஒரு நிமிடம் கடவுளை வேண்டி, இந்த பணம் எனக்கு திரும்பவும் பல மடங்காக வர வேண்டும் என்று எண்ணிக் கொண்டு தர வேண்டும்.
ஆனால் இதற்காக எங்கு இருக்கிறோமோ அங்கெல்லாம் இதை செய்து கொண்டிருக்கக் கூடாது.
ஒரு இடத்திற்கு நாம் பணம் கொடுக்க செல்லப் போகிறோம் அல்லது வெளியே போகிறோம் என்றால் வீட்டிலிருந்து கிளம்பும் போதே,
இந்த மந்திரத்தை சொல்லி வேண்டிய பிறகு செல்ல வேண்டும்.
அங்கு சென்று பணத்தை கொடுக்கும் போது மனதிற்குள் பணம் திரும்ப கிடைக்க வேண்டும் நினைத்தால் மட்டும் போதும்.
அடுத்து இன்னொரு அற்புதமான முறை ஏஞ்சல் எண்ணை பயன்படுத்துவது.
ஏஞ்சல் எண் என்பது கிரகத்தில் இருக்கும் ஆற்றலை ஈர்த்து நமக்கு கொடுப்பது. இந்த ஏஞ்சல் எண்ணை பயன்படுத்தும் போது
நாம் கையில் இருந்து எதை கொடுக்கிறோம் அது பல மடங்கு திரும்ப நமக்கு வரும் என்பது தான் இந்த ஏஞ்சல் எண்ணின் அர்த்தம்.
அந்த வகையில் பணத்தை நாம் கொடுக்கும் போது, இந்த 1 4 0 3 என்ற எண்ணை
மனதிற்குள் நினைத்து இந்த பணம் எனக்கு பல மடங்கு திருப்பி வர வேண்டும் என்று நினைத்துக் கொண்டு கொடுத்தால்,
அது பல மடங்கை விட கோடி மடங்கு திரும்ப கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.
இதையும் படிக்கலாமே: நாளை தை முதல் வெள்ளிக்கிழமை! இந்த ஒரு விளக்கை வீட்டில் ஏற்றி வைத்தால் போதும்.
பொன், பொருள், பணம், பெயர், புகழ் எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக வீட்டிற்குள் போட்டி போட்டுக் கொண்டு வரும்.
பணத்தை யாரும் விருப்பப்பட்டு செலவு செய்யவே மாட்டார்கள். இப்படி இருக்கும் போது ஏதோ ஒரு வகையில் செலவாகி கொண்டிருக்கும் பணமானது,
இது போன்ற எளிய பரிகார முறையினால் நமக்கு பல மடங்கு அது திரும்ப கிடைக்கும் என்றால் அது நல்லது தானே.
இந்த பரிகாரங்களில் நம்பிக்கை இருந்தால் நம்பிக்கையுடன் இதை செய்து நீங்கள் செலவழிக்கும் பணம் பல மடங்கு திரும்ப பெற்று,
நல்ல செல்வ செழிப்பான வாழ்க்கை வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்வோம்.