பணக் பிரச்சனை கட்டாயம் வராது

Date:

Share post:

பணக் பிரச்சனை கட்டாயம் வராது

இந்த இரண்டு பொருள் ஒன்றாக சேர்ந்தால் உங்களுக்கு சுக்கிர யோகம்தான்.

சுக்கிர பகவானை வசியம் செய்து, அப்படியே நம் வீட்டு பணப்பெட்டிக்குள் உட்கார வைத்துக் கொள்ளலாம்.

நீங்கள் யோகக்காரர்களாக மாற இந்த பரிகாரத்தை செய்யலாம். பண பிரச்சனையில் இருந்து விடுபட இந்த பரிகாரத்தை செய்யலாம்.

செல்லும் இடமெல்லாம் செல்வ செழிப்பு பெற இந்த பரிகாரத்தை செய்யலாம். பெயர் புகழ் அந்தஸ்து பதவி உங்களை தேடி வர இந்த பரிகாரத்தை செய்யலாம்.

சுருக்கமாக சொல்லப் போனால் ராஜ வாழ்க்கையை தரும் பரிகாரம் இது. சுக்கிரனையே வசியம் செய்யக்கூடிய அந்த இரண்டு பொருட்கள் என்னென்ன.

அந்த இரண்டு பொருட்களை எந்தெந்த வகையில் எல்லாம் பயன்படுத்தினால், பெரிய அளவில் லாபம் பெறலாம் என்பதை பற்றிய அரிதான ஆன்மீகத் தகவல்கள் இதோ உங்களுக்காக.

சுக்கிரனை வசியம் செய்யும் 2 பொருட்கள்:

நேரடியாக அந்த இரண்டு பொருள் என்ன என்பதை இப்போது தெரிந்து கொள்வோம். வெள்ளை நிற துணி. வாசம் நிறைந்த ஜவ்வாது.

இந்த இரண்டு பொருட்களும் சுக்கிரனுக்கு மிகவும் உகந்தவை. வெள்ளை நிற துணியில் ஜவ்வாதை தடவி விட்டால் போதும்.

இரண்டும் சேர்ந்து உங்களுக்கு பெரிய பெரிய நல்லதை கொட்டிக் கொடுக்கத் தொடங்கிவிடும்.

ஜவ்வாதும் வெள்ளை நிற துணியும் சுக்கிரனை வசியம் செய்யக்கூடிய தன்மை கொண்டவை.

ஆண்கள் முக்கியமான வேலைக்காக வெளியே செல்கிறீர்கள்.

ஒரு வெள்ளை சட்டையை போட்டுக்கொண்டு சென்றால் உங்களுக்கு கிடைக்கக்கூடிய மரியாதையே தனிதான்.

அந்த வெள்ளை சட்டை மேல் வாசத்திற்காக கொஞ்சம் ஜவ்வாது பூசிக்கொண்டு சென்றால் சொல்லவே வேண்டாம்.

மரியாதை மதிப்பு உச்சகட்டத்தை தொடும்.

நீங்கள் பெண்களாக இருந்தால் வெள்ளை நிற துப்பட்டா, வெள்ளை நிறம் கலந்த புடவையை கட்டிக்கொண்டு கொஞ்சம் ஜவ்வாது பூசிக்கொண்டு செல்லுங்கள்.

நீங்கள் செல்லக்கூடிய வேலை 100% வெற்றி.

ஒரு சிறிய வெள்ளைத் துணியில் கொஞ்சமாக ஜவ்வாதை தடவி மடித்து பர்ஸில் வைத்துக் கொண்டால், அந்த பர்ஸில் எப்போதும் பணப்புழக்கம் இருக்கும்.

இதே வெள்ளை துணியை பீரோவில் வைத்தால் பணம் நகை சேரும்.

அந்த வெள்ளைத் துணியை பாக்கெட்டில் வைத்து சென்றால், முன்னேற்றத்தில் தடுக்கும் தடை கற்கள் எல்லாம், படி கற்களாக மாறும்.

உங்களை சுற்றி இருக்கக்கூடிய எதிர்மறையாற்றலை அடித்து நொறுக்கி விட்டு, நேர்மறை ஆற்றலை கொடுக்கக்கூடிய சக்தி.

இந்த வெள்ளை நிறத்துக்கும் ஜவ்வாதுக்கும் உண்டு.

முக்கியமான வேலைக்காக வெளியே செல்லும்போது கொஞ்சமாக ஜவ்வாதை எடுத்து நெற்றியில் இட்டுக் கொண்டு போனால் வெற்றி நிச்சயம்.

ஒரு சிறிய ஜவ்வாது டப்பாவை வாங்கி கொண்டு போய் நவகிரகங்களில் சுக்கிரன் பகவான் இருப்பார் அல்லவா,

அவர்களுடைய பாதங்களில் வைத்து உங்களுடைய பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்து அந்த ஜவ்வாதை வாங்கி வந்து தினமும் பயன்படுத்தி வந்தால் சுக்கிர யோகத்தை பெறலாம்.

சொந்த வீடு கட்ட பரிகாரம் இப்படியாக சின்ன சின்ன எளிமையான ஆன்மீகம் சொல்லும் பரிகாரங்களை செய்து வந்தாலே பணக்கஷ்டத்திலிருந்து விடுபட முடியும்.

வாழ்வில் முன்னேறி விட முடியும்.

சுக்கிர பகவானின் அருள் ஆசையை முழுமையாக பெற முடியும்.

உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் இந்த எளிமையான ஆன்மீகம் பரிகாரங்களை செய்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...