பீரியட்ஸ் வலியில்லாம இருக்க இதை சாப்பிட்டாவே போதும்

Date:

Share post:

பீரியட்ஸ் வலியில்லாம இருக்க இதை சாப்பிட்டாவே போதும்

மாதவிடாய் நாட்கள் மோசமானது அல்ல என்றாலும் இந்த காலம் சங்கடமானது. அதிலும் பருவக்கால மாற்றங்களில் அதிக வெப்பநிலை உள்ள காலங்களில் உடல் வெப்பத்தை பராமரிக்க சரியான உணவுகள் எடுக்க வேண்டும்.

அப்படியான உணவுகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

கோடையில் மாதவிடாய் காலம் என்பது இன்னும் அசெளகரியமானது. மாதவிடாய் காலத்தில் அதிக வெப்பநிலையை கட்டுக்குள் வைத்திருக்க சில உணவுகள் உங்களுக்கு உதவும். இவை மாதவிடாய் வலியை கட்டுப்படுத்த செய்யலாம்.

ஏனெனில் சில வகை உணவுகள் சூடாகவும் குளிராகவும் கருதப்படலாம். சூடான காரமான உணவுகள் உடல் வெப்பத்தை அதிகரிக்கின்றன. இது வலியின் தீவிரத்தை அதிகப்படுத்தலாம். அதனால் தான் மாதவிடாய் காலத்தில் குளிர்ந்த உணவுகள் சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது.

உடலில் உஷ்ணத்தை உண்டு செய்யும் இறைச்சி மற்றும் கோழி போன்றவை தவிர்க்க வேண்டும். இதே போல் வலிமையை மீட்டெடுக்கவும் தசைப்பிடிப்பை எளிதாக்கவும் தினசரி உணவில் பழங்கள், காய்கறிகள், நட்ஸ் வகைகள், விதைகள் போன்றவற்றை எடுக்க வேண்டும்.

பச்சை காய்கறிகள் குறிப்பாக கீரைகளில் மெக்னீசியம் உள்ளது. இது அடிப்படையில் இயற்கையின் தசைகளை தளர்த்தும்.

மெக்னீசியம் கருப்பையின் மென்மையான தசையை தளர்த்துவதன் மூலம் அழற்சி ,புரோஸ்டாக்லாண்டின் அளவை குறைப்பதன் மூலம் செயல்படலாம். அதனால் ஒரு சிறிய கப் கீரை தவிர்க்காமல் சேருங்கள்.

பச்சை காய்கறிகளில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. இரத்த இழப்பு காரணமாக உடலில் இரும்புச்சத்து குறைபாடு இருக்கலாம். இரும்புச்சத்து நிறைந்த காய்கறிகள் ஊட்டச்சத்து கொடுக்கும்.

சால்மன் மற்றும் கானாங்கெளுத்தி போன்ற மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இது குறைந்த வீக்கம் மற்றும் வலியை உண்டாக்கும் அழற்சி பாதையை சீர்குலைக்கிறது. இவர்கள் வலி மாத்திரையை விட இந்த மீன் எண்ணெய் சிறப்பாக செயல்படும் என்று ஆய்வு கண்டறிந்துள்ளது.

சால்மன் மீன் புரதம் நிறைந்த ஆதாரங்கள் கொண்டவை. இது குறைந்த கலோரிகள் மற்றும் கொழுப்பு அடங்கியவை.

உடலுக்கு நன்மை பயக்க கூடியவை. கடல் உணவு பிடிக்கவில்லையெனில் அதற்கு மாற்றாக அவகேடோ, அக்ரூட் பருப்புகள் மூலம் ஒமேகா 3 பெறலாம்.

வாழைப்பழம் மாதவிடாய் காலத்தில் சூப்பர் உணவு என்று சொல்லலாம். இது வைட்டமின் பி6 கொண்டது.

இது ஈஸ்ட்ரோஜனை குறைக்கவும் புரோஜெஸ்ட்ரோனை அதிகரிக்கவும் செய்கிறது. இதில் பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து உள்ளது.

தசை வலியை குறைக்கும் , ஆரோக்கியமான குடல் இயக்கங்களை ஊக்குவிக்கவும் செய்யும்.

அவகேடோ வீக்கம் பசி மற்றும் தசைப்பிடிப்புகளுக்கு உதவக்கூடியது. இதில் பொட்டாசியம் உள்ளது. இது இயற்கை டையூரிடிக் ஆக செயல்படுகிறது.

அதிகப்படியான சோடியம் மற்றும் திரவத்தை உடலில் இருந்து வெளியேற்றுகிறது. பொட்டாசியம் தசைப்பிடிப்புகளை தடுக்கிறது. முழுமையான திருப்தியை அளிக்கிறது. இதை ஸ்மூத்தியாக எடுத்துகொள்ளலாம்

பெர்ரிகளில் ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. இது வீக்கத்தை நிர்வகிக்க செய்யும்.

உடலில் நச்சுத்தன்மை செயல்முறையை ஊக்குவிக்கிறது. இது மாதவிடாய் வலி நிவாரணத்துக்கு நன்மை பயக்க கூடியது.

அடர்ந்த பச்சை நிற காய்கறிகள் உதவும் என்பதை பார்த்தோம். குறிப்பாக ப்ரக்கோலி அதிக நார்ச்சத்து கொண்ட காய்கறியாகும்.

இது வீக்கத்தை போக்க உதவும். ப்ரக்கோலியில் பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் மற்றும் வைட்டமினக்ள் ஏ, பி, சி போன்றவை உள்ளன.

இவை அனைத்தும் தசைப்பிடிப்பு மற்றும் பிற மாதவிடாய் அறிகுறி குறைய உதவும். இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ள ப்ரக்கோலி மாதவிடாய் காலத்துக்கு ஏற்ற ஒன்று.

அக்ரூட் பருப்புகள், சியா விதைகள் மற்றும் கொட்டைகள் மெக்னீசியம் நிறைந்தவை. இது தசைப்பிடிப்பை உண்டு செய்யும் சுருக்கங்களை குறைக்க உதவும்.

அக்ரூட் பருப்பில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. இது இரண்டு மடங்கு வலி நிவாரணம் அளிக்கின்றன.

மெக்னீசியம் நரம்பு மண்டலத்தை சீராக்க உதவுகிறது. கார்டிசோல் என்னும் மன அழுத்த ஹார்மோனின் அளவை குறைக்க செய்கிறது. இது மாதவிடய் கால மனநிலை ஆரோக்கியமாக வைக்க உதவும்.

பீரியட்ஸ் வலியில்லாம இருக்க இதை சாப்பிட்டாவே போதும்

நாள் ஒன்றுக்கு 8 டம்ளர் தண்ணீர் குடிப்பது மாதவிடாய் பிடிப்பை தளர்த்தும். இரத்தப்போக்கு காலத்தை குறைக்கும்.

மேலும் வலி நிவாரணிகளின் எண்ணிக்கையை குறைக்கவும் உதவும். நீரேற்றமாக இருப்பதன் மூலம் வாசோபிரசின் என்னும் ஹார்மோன் ஒழுங்குப்படுத்துகிறது.

இது வலிமிகுந்த பிடிப்புகளுக்கு காரணமான கருப்பை சுருக்கங்களை தூண்டுகிறது.

மாதவிடாய் நாட்களை செளகரியமாக கழிக்க உங்கள் உணவு முறையில் இவற்றை சேருங்கள்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...