மந்தமான பிள்ளைகள் கூட படிப்பில் சிறந்து விளங்க சக்தி வாய்ந்த மந்திரம்

Date:

Share post:

மந்தமான பிள்ளைகள் கூட படிப்பில் சிறந்து விளங்க சக்தி வாய்ந்த மந்திரம்

குழந்தைகள் படித்து நல்ல மதிப்பெண்களை பெற வேண்டும் என்று தான் நாம் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை என்று குழந்தைகளை நல்ல பள்ளியில் படிக்க வைக்கிறோம்.

இப்போதுள்ள சூழ்நிலையில் அனைத்து குழந்தைகளும் நல்ல ஒரு புத்திசாலித்தனமான குழந்தைகளாகவும், படிக்கும் குழந்தைகளாகவும் தான் இருக்கிறார்கள்.

ஆனால் சில குழந்தைகள் தேர்வு நேரத்தில் படிப்பதை எல்லாம் மறந்து போய் விடுகிறது. சில பிள்ளைகள் எப்போதுமே கொஞ்சம் மந்த நிலையிலேயே இருப்பார்கள்.

இது மாற வேண்டும் என்றால் அவர்களுக்கு சரஸ்வதி தேவியின் அனுக்கிரகம் கிடைக்க வேண்டும்.

அந்த அனுகிரகம் அவர்களுக்கு பரிபூரணமாக கிடைக்க இந்த ஒரு வரி மந்திரம் போதும் என்று ஆன்மீகம் சொல்கிறது.

அது என்ன மந்திரம் எப்படி சொல்ல வேண்டும் என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

பெற்றோர்களின் மிகப் பெரிய கனவே தங்கள் குழந்தைகள் நன்றாக படித்து நல்ல ஒரு நிலையில் இருக்க வேண்டும் என்று தான்.

இன்று ஒவ்வொரு பெற்றோரும் காலை முதல் மாலை வரை நேரம் காலம் பார்க்காமல் ஓயாமல் உழைத்து வருவதும் தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் நல்ல முறையில் இருக்க வேண்டும் என்று தான்.

அதற்கு அடிப்படை அவர்களுக்கு நல்ல கல்வி கிடைக்க வேண்டும். இந்தக் கல்வி கிடைக்க நம் பெரிய பெரிய பள்ளிகளில் சேர்த்து படிக்க வைத்தால் மட்டும் போதாது.

படிப்பவை எல்லாம் குழந்தைகளின் ஞாபகத்தில் தங்கி அவர்கள் அதை சரியான நேரத்தில் வெளிப்படுத்தும் புத்தி கூர்மையும் வேண்டும்.

அதற்கு இந்த ஒரு வரி மந்திரம் போதும். குழந்தைகள் நன்றாக படிக்க சொல்ல வேண்டிய மந்திரம்: ஓம் ஆத்ம வித்யா பிரம்ம சரஸ்வதி.

குழந்தைகள் இரவில் உறங்க செல்லும் சென்றதும் அவர்கள் படுக்கையில் நேராக படுத்த நிலையிலே இருக்க, பெற்றோர்கள் குழந்தைகளின் காதில் இந்த மந்திரத்தை 16 முறை தினமும் உச்சரிக்க வேண்டும்.

நம் ஆழ்மனதானது இரவு உறங்க பத்து நிமிடத்திற்கு முன் நடப்பவையும் காலை விழித்த பத்து நிமிடத்திற்குள் நினைப்பவையும் அப்படியே பதிந்து அது நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த மந்திரமும் அது போன்ற ஒரு முயற்சி தான். இரவில் குழந்தைகள் தூங்கும் முன் இந்த மந்திரத்தை 16 முறை காதில் உச்சரித்த பின், நீ நன்றாக படிப்பாய் உனக்கு நல்ல திறமை இருக்கிறது.

உனக்கு நல்ல ஞாபக சக்தி இருக்கிறது. நீ தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெறுவாய் என்ற வார்த்தைகளை திரும்பத் திரும்ப சொல்லி அவர்களின் மனதிற்குள் நம்பிக்கையும்

மந்திரத்தின் மூலம் சரஸ்வதி தாயாரின் அனுகிரகத்தையும் நாம் கொடுக்கும் பொழுது நிச்சயம் அவர்கள் படிக்கும் அனைத்தும் ஞாபகத்தில் இருந்து தேர்வில் நிச்சயம் நல்ல மதிப்பெண்களை பெறுவதோடு திறமை வாய்ந்த குழந்தைகளாகவும் இருப்பார்கள்.

இந்த மந்திரத்தை சொல்வதோடு அருகில் இருக்கும் விநாயகர் ஆலயத்திற்கு தேன் வாங்கி கொடுத்து அபிஷேகம் செய்த பிறகு,

அந்தத் தேனை தினமும் ஒரு சொட்டு குழந்தைகளுக்கு கொடுத்து வரும் போது அவர்களின் ஞாபகத்திறன் அதிகரிப்பதுடன் படிப்பில் இன்னும் நல்ல முன்னேற்றம் அடைய முடியும் என்றும் சொல்லப்படுகிறது.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...